மான - பெருமை “மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்” என்று (1319) மந்திரப் படலத்துள் அமைச்சரைக் கூறியது காண்க. ஏனையர் என்பது தன்னோடு தொடர்புடையாரையும், பிறர்களும் என்பது தொடர்பில்லாதவர்களையும் குறித்ததாகக் கொள்க; பலரும் கற்ற என்பது கருத்து. நீர்க்கடன் முதலிய செய்த பின்னரே சீதை இருந்த இடத்துக்குச் செல்கின்றான் என்று கம்பர் கூறியது ஈண்டுக் கருதி உணரத்தக்கது. 82 சீதையின் பாதங்களில் பரதன் வீழ்ந்து புலம்புதல் | 2457. | எய்திய வேலையில், தமியள் எய்திய தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்; கைகளின் கண்மலளிளிர் புடைத்து, கால்மிசை, ஐயன், அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ! |
எய்திய வேலையில் - அந்தக் குடிலை அடைந்தபொழுது; ஐயன் அப்பரதன் -ஐயனாகிய அந்தப் பரதன்; தமியள் எய்திய தையலை - தனியளாய் வனம் புகுந்த சீதையை; நோக்கினன் - பார்த்து; சாலை நோக்கினான் - அவள் இருந்த குடிலையும்பார்த்து; கண்மலர் கைகளின் புடைத்து - மலர்போன்ற கண்களில் கைகளால்அடித்துக்கொண்டு; கால்மிசை - அப்பிராட்டியின் திருவடிகளில்; வீழ்ந்து -விழுந்து; அரற்றினான் - புலம்பினான். தமியள் எய்திய - குடிலில் தனியளாயிருந்த என்றும் ஆம். துக்க மிகுதிக்கண் கண்களில்அடித்துக்கோடல் வழக்கு. ‘அரோ’ ஈற்றசை. 83 | 2458. | வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி, நீர் உந்திய நிரந்தரம்; ஊற்று மாற்றில; சிந்திய - குரிசில் அச் செம்மல் சேந்த கண் - இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே! |
குரிசில் அச்செம்மல் - குரிசிலாகிய அந்தப் பரதனது; சேந்த கண்- சிவந்த கண்கள்; இந்தியங்களில் - (கண் முதலாகிய) பொறிகளில்; எறிகடல் உண்டுஎன்ன - அலை வீசுகிற கடல் இருக்கிறது என்று சொல்லும்படி; வெந் துயர் தொடர்தர- கொடிய சோகம் பீடித்தலால்; விம்மி விம்மி-; நீர் - நீரை; உந்திய- வெறிச் செலுத்தின; நிரந்தரம் - எப்பொழுதும்; ஊற்று - பெருகுதல்; மாற்றில - நீங்காதவையாய்; சிந்திய - (நீரைச்) சொரிந்து கொண்டேயிருந்தன. பூமியிற் கடல்போல இந்திரியங்களிலும் கடல் உண்டு போலும் என்று கண்டார் நினைக்கும்படிஇருந்தது பரதன் கண்களில் நீர் பெருகும் தன்மை என்பதாம். இந்திரியம் எனப்து ஐம்பொறிகளையும் குறிக்குமேனும் சிறப்பு வகையால் இங்குக் கண்களைமட்டும் கொள்க. ‘ஏ’ஈற்றசை. 84 |