பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 681

மான - பெருமை “மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்” என்று (1319)
மந்திரப் படலத்துள் அமைச்சரைக் கூறியது காண்க. ஏனையர் என்பது
தன்னோடு தொடர்புடையாரையும், பிறர்களும் என்பது
தொடர்பில்லாதவர்களையும் குறித்ததாகக் கொள்க; பலரும் கற்ற என்பது
கருத்து. நீர்க்கடன் முதலிய செய்த பின்னரே சீதை இருந்த இடத்துக்குச்
செல்கின்றான் என்று கம்பர் கூறியது ஈண்டுக் கருதி உணரத்தக்கது.      82

சீதையின் பாதங்களில் பரதன் வீழ்ந்து புலம்புதல்  

2457.எய்திய வேலையில், தமியள் எய்திய
தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்;
கைகளின் கண்மலளிளிர் புடைத்து, கால்மிசை,
ஐயன், அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ!

     எய்திய வேலையில் - அந்தக் குடிலை அடைந்தபொழுது; ஐயன்
அப்பரதன்
-ஐயனாகிய அந்தப் பரதன்; தமியள் எய்திய தையலை -
தனியளாய் வனம் புகுந்த சீதையை; நோக்கினன் - பார்த்து; சாலை
நோக்கினான்
- அவள் இருந்த குடிலையும்பார்த்து; கண்மலர் கைகளின்
புடைத்து
- மலர்போன்ற கண்களில் கைகளால்அடித்துக்கொண்டு;
கால்மிசை - அப்பிராட்டியின் திருவடிகளில்; வீழ்ந்து -விழுந்து;
அரற்றினான் - புலம்பினான்.

     தமியள் எய்திய - குடிலில் தனியளாயிருந்த என்றும் ஆம். துக்க
மிகுதிக்கண் கண்களில்அடித்துக்கோடல் வழக்கு. ‘அரோ’ ஈற்றசை.     83

2458.வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி, நீர்
உந்திய நிரந்தரம்; ஊற்று மாற்றில;
சிந்திய - குரிசில் அச் செம்மல் சேந்த கண் -
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே!

     குரிசில் அச்செம்மல் - குரிசிலாகிய அந்தப் பரதனது; சேந்த கண்-
சிவந்த கண்கள்; இந்தியங்களில் - (கண் முதலாகிய) பொறிகளில்;
எறிகடல் உண்டுஎன்ன - அலை வீசுகிற கடல் இருக்கிறது என்று
சொல்லும்படி; வெந் துயர் தொடர்தர- கொடிய சோகம் பீடித்தலால்;
விம்மி விம்மி-; நீர் - நீரை; உந்திய- வெறிச் செலுத்தின; நிரந்தரம் -
எப்பொழுதும்; ஊற்று - பெருகுதல்; மாற்றில - நீங்காதவையாய்; சிந்திய -
(நீரைச்) சொரிந்து கொண்டேயிருந்தன.

     பூமியிற் கடல்போல இந்திரியங்களிலும் கடல் உண்டு போலும் என்று
கண்டார் நினைக்கும்படிஇருந்தது  பரதன் கண்களில் நீர் பெருகும் தன்மை
என்பதாம்.  இந்திரியம் எனப்து ஐம்பொறிகளையும் குறிக்குமேனும்  சிறப்பு
வகையால் இங்குக் கண்களைமட்டும் கொள்க. ‘ஏ’ஈற்றசை.            84