பக்கம் எண் :

688அயோத்தியா காண்டம்

பின்றுவாய் கொல்’ - நீயும் பின்னிடுவாயோ; என்ன- என்று; பேசுவான்-
மேலும் கூறுவான் ஆயினன்.

     இராமனும் இப்படிக் கேட்டுவிட்டானே என்பது பதைப்புக்கும், நெடிது
நோக்கியமைக்கும் காரணம், அறவழியில் மேற்சொல்ல முடியாமல் பின்தங்கி
விடுதலைப் ‘பின்றுவாய்’ என்றான். ‘கொல்’ ஐயவினா.‘ஆம்’ ‘ஏ’ அசைகள். 97

2472.‘மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்,
நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான் -
தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால்,
எனக்கு ஒன்றா, தவம் அடுப்பது எண்ணினால்?

     ‘மனக்கு ஒன்றாதன - (சான்றோர்) மனத்துக்குப் பொருத்தம்
இல்லாதனவாகிய; வரத்தின் - வரத்தினால்; நின்னையும் நினக்கு
ஒன்றாநிலை நிறுவி
- உன்னையும்உனக்குப் பொருந்தாத நிலைமையில்
நிறுத்தி; நேமியான்தனை - சக்கரவத்தியாகியதயரதனை; கொன்றாள் -
கொன்ற கைகேயி; தரும் - பெற்ற; தனையன் -மகன்; ஆதலால் -;
எனக்கு-; எண்ணினான்
- நினைத்தால்; தவம் - விரதவொழுக்கத்தை;
அடுப்பது - மேற்கொள்ளுவது; ஒன்றா - பொருந்தாது.

     ‘ஒன்றா’ என்பது ‘ஒன்றாது’ என்பதன் விகாரம். நான் தவம் மேற்
கொள்வது பொருந்தாது என்று கருதியோ இவ்வாறு என்னை வினாவினாய்
என்பது குறிப்பு. முறைமை தவறியதைக் கேட்ட வரம் ஆதலின் ‘மனக்கு
ஒன்றாதன வரம்’ என்றான்.                                      98

2473.‘நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன்,
சாவது ஒர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்;
யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்?

     நோவது ஆக - வருந்துவதாக;  இவ் உலகை - இந்த உலகத்தை;
நோய்செய்த - துன்புறுத்திய; பாவகாரியின் - பாவத்தைச்
செய்தவனிடத்தில்;  பிறந்த -; பாவியேன் - பாவியாகிய யான்;  சாவது
ஒர்கிலேன்
- சாகத்துணிந்தேனில்லை;  தவம் செய்வேன் அலேன் -
தவம் செய்வதற்குத் தக்கவனும் அல்லேன்; யாவன் ஆகி இப்பழி நின்று
ஏறுவேன்?
- (அப்படியானால்) எத்தன்மையானாகி இந்தப்பழியிலிருந்து
நீங்குவேன்?

      பழிநீங்குவது இறப்பினாலோ பிராயச்சித்தமாகத் தவம்
செய்வதனாலோ ஆகவேண்டும்.இரண்டும் இல்லையானால் என் பழியை
எவ்வாறுதான் போக்கிக் சொள்வேன் எனப் பரதன் மனம்கலங்கினான்.
பாவகாரி - பாவி.                                              99