பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 689

2474.‘நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்,
பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர்
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ?

     ‘நிறையின் நீங்கிய - கற்பு நெறிவிலகிய;  மகளிர் நீர்மையும் -
பெண்களின் தன்மையும்; பொறையின் நீங்கிய தவமும் -
பொறுமையினின்று விலகிய தவவொழுக்கமும்; பொங்கு அருள் துறையின்
நீங்கிய
- விளங்குகின்ற கருணைவழியிலிருந்து விலகிய; அறமும் -
தருமமும்; தொல்லையோர் - முன்னோர்களது;முறையின் நீங்கிய -
முறைமையிலிருந்து  விலகிய;  அரசின் - அரசாட்சியைக்காட்டிலும்;
முந்துமோ - (கொடுமையில் முற்படுமோ? (முற்படாது  என்றபடி)

     அரசு முறைமையில் தவறுதல் மற்றவற்றைக் காட்டிலும் பெருங்கேடு
பயப்பதென்றான்;பிறவற்றையும் நெறிவழி நிற்கச் செய்வது அரசின்
பாற்பட்ட தாதலால். “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் இல்வழி
இன்றாம்”மணி - 22 - 208- 9,) என்பதை ஈண்டுக்கருதுக.அறத்தின்
பயன்அருளே. அருளில்லான் அறம்செய்தல் என்பது நனைப்புக்கிடம்
தருவது. “அருளால் அறம் வளரும்” (அறநெறி. 142) என்பதையும்
காண்க.                                                     100

2475.‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம்
துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால்,
மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று
அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ?

     ‘பிறந்து - (சக்கரவர்த்திக்கு மூத்த மகனாகப் ) பிறந்து;  நீயுடைப்
பிரிவு இல் தொல் பதம்
- நீ உரிமையாகப் பெற்றுடை உன்னைப் பிரிதல்
இல்லாத பழையதாகிய அரசபதவியை ; துறந்து  - கைவிட்டு;  மாதவம்
தொடங்குவாய் என்றால்
- நீயேபெரிய தவத்தைச் செய்யத்
தொடங்குவாயெனின்; மறந்து - அறிவு கெட்டு; நீதியின்திறம்பி - நீதிக்கு
மாறுபட்டு; வாளின் கொன்று - வாளால் கொலை செய்து; அறம்
தின்றான் என
- அறத்தை அழித்தவன் என்று சொல்லுமாறு; அரசு அது
ஆள்வெனோ?
- உரிமையில்லாத அரசை ஆள்வேனோ? (ஆளேன்
என்றானாம்)

     உரிமையும் உறவும் உடைய நீயே அரச பதவி கைவிட்டுத் தவம்
செய்வாய் ஆனால், அஃதில்லாத யான் ஆளத் தொடங்குதல் வலிந்து
கைப்பற்றி முறை தவறி ஆள்வதாக அன்றோ முடியும் என்றானாம். வாளின்
கொன்று - வாளால் மிரட்டி என்னும் பொருளில் வந்துள்ளது. அறம்
தின்றல் - தருமத்தை அடியோடழித்துவிடல்.                        101

2476.‘தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச, நீ
புகையும் வெஞ் சுரம் புகுத, புந்தியால்