பக்கம் எண் :

694அயோத்தியா காண்டம்

வெம்மைசேர்- கொடுமை பொருந்திய; நரகம் ஆள - நரகத்தை
அனுபவிக்க; யான்-; கொம்மை- திரண்ட; வெம் முலைக் குவையின்
வைகி
- விரும்பப்படும் முலைக்குவட்டின்மேல்தங்கி;  வாழ் - வாழ்ந்து;
செம்மை சேர் நிலத்து - (இதுகாறும்) செம்மைபொருந்திய நாட்டின்கண்;
அரசு செய்வேனோ - அரசு செய்துகொண்டிருப்பேனோ? (இரேன்).

     இவறுதல் - கைகேயிக்கு கொடுத்த வரத்தை நிறைவேற்றாது உலோபம்
செய்தல். நான் அரசாள முற்பட்டால் எந்தையார் பொய்யுரைத்தாராய் நரகம்
சேர்வர். தந்தையை நரகுக்கனுப்பித் தனையர் அரசாளுதல் தக்கதோ?
புதல்வர் செய்யும் கடனோ? என்றான் இராமன். அரசாட்சியை இன்பம்
அனுபவித்தல் என்னும் கருத்தில் “கொம்மை வெம்முலைக் குவையின் வைகி
வாழ் அரசு” என்றான் என்க.                                    110

2485.‘வரன் நில் உந்தை சொல் மரவினால், உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,
அரசு நின்னதே; ஆள்க” என்னவே,-

     ‘வரன் - (கைகேயிக்குக் கொடுத்த) வரத்திலே; நில் - நிற்கின்ற;
உந்தை சொல் மரபினால் - உன் தந்தையாகிய தயரதன் சொன்ன சொல்
முறைப்படி; உடைத்தரணி - அவனுடையதான உலகம்; நின்னது என்ற
இயைந்த தன்மையால்
- பரதனாகியஉன்னுடையது என்று வந்து
பொருந்திய தன்மையாலும்;  நீ-; உரனின் - வலிமையோடு; பிறந்து -
(எனக்கு அடுத்த தம்பியாகப்) பிறந்து; உரிமை ஆதலால் - ஆட்சிஉரிமை
பெறுதலாலும்; அரசு - அரசாட்சி; நின்னது - நின்னுடையது; ஆள்க’ -
ஆள்வாயாக; என்ன - என்று இராமன் சொல்ல...

     இராமன், பரதன் ஆள வேண்டும் என்பதற்கு இங்கு இரண்டு
காரணங்கள் கூறினான் எனலாம். வரத்தால் பரதனுக்கு அரசு சேர்ந்தது
என்பது ஒன்று, வரத்தால் இராமன் காடு செல்ல அடுத்த தம்பியாகப்
பிறத்தலின் ஆட்சியுரிமை இயல்பாகவே அவனை வந்தடைகிறது என்பது
மற்றொன்று. ஆகவே, ‘அரசு நின்னதே ஆள்க’ என்றனன், இதனை மறுத்தல்
தந்தைக்கும் தாய்க்கும் மாறுபட்டு அறத்தின் வழுவுதலாகும் என்பதையும்
புலப்படுதினான். ‘ஏ’ காரம் தேற்றம்.                               111

பரதன் ‘யான் தர நீ முடிசூட்டு’ என இராமனை வேண்டல்  

2486.‘முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்’
மன்ன! போந்து நீ மகுடம் சூடு’ எனா,