பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 695

     ‘மன்ன! - அரசனே!; முன்னர் வந்து உதித்து - எனக்கு முன்னே
வந்து பிறந்து; உலகம் மூன்றிலும் - மூன்றுலகத்தும்; நின்னை ஒப்பு இலா
நீ
- நின்னை ஒப்பாவாரைப் பெற்றிலாத நீ; பிறந்த-; பார் - இப்பூமி;
என்னது ஆகில் - (நீ சொன்னபடி) என்னுடைய தாயின்; யான் இன்று
தந்தனென்
- நான்இப்பொழுது அதனை உனக்குக் கொடுத்துவிட்டேன்; நீ
போந்து மகுடம் சூடு’
- நீ வந்துமுடிசூடுவாயாக; எனா- என்று சொல்லி...
(மேல் முடியும்).

     ‘நீ பிறந்த பார்’ என்று சொல்லி, ‘முதலில் இந்தப் பூமியில் நீ
பிறந்தபடியால் இது உனக்கே உரிமை; பின்னரே எனக்கு உரிமையாம்’
என்பது  பரதன் குறிப்பு. மன்ன! என்று பலமுறையும்பரதன் இப்பகுதியில்
இராமனை அழைப்பது குறிக்கொளத்தக்கது.                        112

2487.‘மலங்கி வையகம் வருந்தி வைக, நீ,
உலம் கொள் தோற் உனக்கு உறுவ செய்தியோ?
கலங்குறாவணம் காத்தி போந்து’ எனா,
பொலம் குலாவு தாள் பூண்டு, வேண்டினான்.

     ‘வையகம் - நிலவுலகம்; மலங்கி - வருந்தி நிற்க; நீ-; உலம்கொள்
தோள் உனக்கு உறுவ செய்தியோ?
- கற்றூணைப் போன்ற தோள்களை
உடைய உனக்குரியதகுதியானவற்றைச் செய்வாயோ?; கலங்குறாவணம் -
(உலகம்) கலங்காதபடி; போந்து காத்தி’- வந்து காப்பாற்றுவாயாக; எனா-
என்று; பொலம் குலாவு தாள்- பொன் மயமான அழகு விளங்குகிற
திருவடிகளை; பூண்டு - பிடித்துக் கொண்டு; வேண்டினான்-.

     ‘உலம் கொள் தோள்’ உலகைத் துன்பம் நீக்கித் காத்தற்கே அன்றித்
தவம்செய்தற்கன்று எனக் குறிப்பால் உணர்த்தினானாம்.             113

பரதனை அரசாட்சி ஏற்குமாறு இராமன் ஆணையிடல்  

2488. ‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள, அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ?

     ‘பசைந்த சிந்தை நீ - (என்பால்) அன்புற்ற மனத்தை உடைய நீ;
பரிவின்- (உன்) அன்பினால்;  வையம் - உலகத்தை;  என் வசம்
செய்தால் -
என்னுடையதாகச் செய்தால்;  அது முறைமையோ? - அது
நீதியாகுமோ?; வசைக்கு அசைந்த- பழிக்கு அஞ்சிய; எந்தை யார்- எம்
தந்தையார்; அருள - (கைகேயிக்கு)வரம் அளித்தருள;