அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் - அன்று அதற்குஉடன்பட்டுக் (காடு புகுவதாக) ஏற்றுக்கொண்ட பதினான்கு ஆண்டுகளும்; இன்றொடு ஏறுமோ? -இன்றோடு முடிந்துபோய்விடுமோ? ஏற்றுக்கொண்டதை யான் நிறைவேற்ற நீ உதவி செய்தல் வேண்டும் என்று பரதனிடம் தெரிவித்தான் இராமன். அப்படியில்லையேல் தந்தையார் மேல் பிழிவந்து சேரும். அவரே ‘வசைக்கு அசைந்த’ எந்தையார் - பழிக்கு அஞ்சுகிறவர் என்றும் குறிப்பித்தான். 114 | 2489. | ‘வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம், “தூய்மை” என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ? தீமைதான், அதின் தீர்தல் அன்றியே, ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே? |
‘வையகம் - உலகம்; வாய்மை என்னும் ஈது அன்றி - சத்தியம் என்கிற இதுவொன்றில்லாமல்; “தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ? - “தூய்மை என்கின்றஒன்று தனியே இருப்பதாகச் சொல்லுமா?; தீமைதான்- தீய குணம் என்பது; அதின்தீர்தல் அன்றியே- அந்தச் சத்தியத்தை விட்டு நீங்குதல்தானே அல்லாமல்; ஆய் - ஆராய்கின்ற; மெய ஆக - உண்மையாக; வேறு அறையல் ஆவதே - சத்தியமன்றிவேறு ஒன்றைச் சொல்ல இயலுமா ? (இயலாது என்றபடி.) ‘வாய்மையே தூய்மையாம்; வாய்மைதவிரத் தூய்மை தனிவேறில்லை; தீமை என்பது வாய்மையின் தவறுவதே அன்றி வேறன்று; சத்தியத்துக்கு இணையாக, மாற்றாக வேறொன்றைச் சொல்ல இயலாது. ஆகவே, தந்தையார் உரையை, சத்தியத்தைக் காப்பதுதான் என்க தூய்மையாகும். வேறு இல்லை’ என்றான் இராமன். ‘புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்’ (குறள். 298) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. 115 | 2490. | ‘எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ தந்தபாரகம் தன்னை, மெய்ம்மையால் அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால். |
‘எந்தை ஏவ -என் தந்தை கட்டளை இட்டவாறு; ஆண்டு ஏழொடு ஏழ் எனா - பதினான்கு ஆண்டுகள் என்று; வந்த காலம் - அமைந்த காலம்வரை; நான் வணத்துள் வைக - நான் காட்டில்தங்கியிருக்க; நீ -; தந்த பாரகம் தன்னை - தந்தை அளித்த அரசை; மெய்ம்மையால்- (தந்தையின்) சத்தியம் தவறாமல்; அந்த நாள் எலாம் - அந்தப் பதினான்கு ஆண்டுகளும்; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆள் - ஆள்வாயாக. |