பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 699

நின்றது. இளை எனும் திரு, பூதேவியாம். கோடு பிறையும் பூமி அதில் உள்ள
களங்கமும் போலும் என்று உவமித்தார். ‘நிறக்கும் செழுஞ்சுடர்க் கோடும்,
இப்பாரும், நிசாமுகத்துச், சிறக்கும் பிறையும், களங்கமும் போலும் எனில்,
சிறுகண், மறக்குஞ்சரம் செற்றமாயோன், அரங்கன் வராகம். - அது ஆய்ப்,
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே” எனப்
(திருவரங்கத்து மாலை. 28) பின்னுள்ளோரும் இவ்வுவமையை இவ்வாறே
அனுபவிப்பதை ஒர்ந்துணர்க. ‘அரோ’ அசை.                       119

2494.'ஆதிய அமைதியின் இறுதி, ஐம் பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்கபின்,
நாதன் அவ் அகன் புனல் நல்கி, நண்ண அருஞ்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான்.

     ஆதிய - அதற்குமுனனான; அமைதியின் இறுதி - அக்கல்ப
காலத்தின் முடிவிலே; ஐம்பெரும் பூதமும் - நிலம், நீர், தீ, காற்று,
ஆகாயம் என்னும் ஐம் பூதங்களும்; வெளி ஒழித்து - வெளியாம் தன்மை
நீங்கி; எவையும் - எல்லாத் தத்துவங்களும்; புக்கபின் - இறைவனுக்குள்
ஒடுங்கியபிறகு; நாதன் - திருமால்; அவ் அகன் புனல் நல்கி - அந்தப்
பரந்த நீரினை உண்டாக்கி; (அதனிடையே) நண்ண அருஞ் சோதிஆம்
தன்மையின்
- பிறராற் கிட்டுதற்கரிய ஒளிவடிவாம் தன்மையோடு; துயிறல்
மேயினான்
- அறிதுயில் செய்யத் தொடங்கினான்.

     உலகம் அனைத்தும் அழிந்து போக ஊழிநீரில் திருமால் யோக
நித்திரை செய்வது இங்குக் குறப்பட்டது. சிருஷ்டியில் மேலிருந்து கீழ்
இறங்கும் தத்துவங்கள், ஒடுங்குகிளபோது கீழிருந்து மேலேறி ஒன்றொன்றாக
ஒடுங்கி நின்ற பிரகிருதியும் புருஷனும் பரமாத்மாவினிடத்தில் ஒடுங்கும்
ஆதலின், பூதத்தை ஒடுக்க முறையில் முதலில் சொல்லிப் பின்னர் எவையும்
புக்கபின் என்று பிறவற்றை அவற்றின்பின் ஒடுங்கியதாகக் குறிப்பிட்டார்.
ஆதிய அமைதியின் என்பதற்கு முன்பு உண்டான முறைப்படியே என்று
பொருள் உரைப்பாரும் உளர்.                                  120

2495.‘ஏற்றஇத் தன்மையின், அமரர்க்கு இன் அமுது
ஊற்றுடைக் கடல்வணண் உந்தி உந்திய
நூற்று இதழ்க் கமலத்தில், நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட, முதல்வன் தோன்றினான்.

     ஏற்ற - அறிதுயில் செய்தலை ஏற்றுக்கொண்ட; இத் தன்மையின் -
இத்தன்மையினாலே; அமரர்க்கு இன் அமுது ஊற்றுடைக் கடல்வணன்-
தேவர்களுக்கு இனியஅமுதத்தைச் சொரிதலுடைய கடல் போலும் கரு
நிறமுடைய திருமால்; உந்தி - தன்திருநாபியினாலே; உந்திய -
தோற்றுவித்த; நூற்று இதழ்க் கமலத்தில் - நூறுஇதழ்களை உடைய
தாமரை மலரிலிருந்து; முதல்வன் - எல்லாப் பொருள்களுக்கும்
மூலமானவனாகிய பிரமன்; நொய்தின் யாவையும் தோற்றுவித்து