பக்கம் எண் :

700அயோத்தியா காண்டம்

உதவிட- எளிதில் எல்லாம் பொருள்களையும் உண்டாக்கி உலகிற்கு உதவ
வேண்டி; தோன்றினான்
- வெளிப்பட்டருளினான்.

     பிரளய காலத்து  ஓடுங்கிய பிரமன் தான் ஒடுங்கிய நாபிக் கமலத்தில்
இருந்து மீண்டும்வெளிப்படுவான் என்பது படைப்புக் கொள்கை. திருமாலின்
நாபிக் கமலத்தில் பிரமன்வெளிப்பட்டுப் படைப்புத் தொழிலை நடத்தத்
தொடங்கினான் என்றவாறாம்.                                   121

2496.‘அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனிக் குலம்; முதல் உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை;
ஒன்று உளது உரை இனம்; உணரக் கேட்டியால்.

     அவன்- அத்திசைமுகன்; அன்று- அக்காலத்து; உலகினை அளிக்க-
உலகத்தைப் படைக்க;  முதல் ஆகியது - முதலில் உண்டாகியது;  உன்
தனிக் குலம்
- உன்னுடைய ஒப்பற்ற சூரிய குலம்;  உள்ள வேந்தர்கள் -
இந்தக் குலத்தில் தோன்றியஅரசர்களும்; முறை இகந்து உளார் -
முறைமை தவறியவர்; இன்று அளவினும் - இன்றுவரையிலும்; இலை -
இல்லை; இனம் ஒன்று உரை உளது - இன்னும் ஒரு வார்த்தைஇருக்கிறது;
உணரக் கேட்டி - தெரியக் கேட்பாயாக.

     “ஆதிமால் அமலன் நாபிக்கமலத் தயனுதித்தயன் மரீசியெனும்
அண்ணலை அளித்த பரிசும், காதல் கூர்தரு மரீஇசி மகனாகி வளரும்
காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் “எனக் (கலிங்கத்துப். இராச. 9)
கூறுமாறு திருமால் - அயன் - மரீஇசி, காசிபன் - சூரியன் எனக் குலமுறை
காணுதலின் முதற்றோன்றிய குலமாதல் அறிக. நீ மூத்தவனாதலின் முறை
இகவாமல் நீயே அரசு புரிதல் வேண்டும் என்பது வசிட்டன் கூற்றாகும்.

2497.‘ “இத இயல் இயற்றிய குரவர் யாரினும்,
மத இயல் களிற்றினாய்! மறுஇல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்க,  பண்பினால்
உதவிய ஒருவனே, உயரும்” எனபரால்.

     ‘மத இயல் களிற்றினாய்’ - செருக்குன்ற இயல்பினை உடைய ஆண்
யானையைஉடையவனே!; மறுவில் விஞ்சைகள் - குற்றமற்ற கல்விகளை;
பதவிய இருமையும் பயக்க- பக்குவப்பட  இம்மை  மறுமை இரண்டிலும்
பயன் கொள்ளுமாறு; பண்பினால் உதவிய -அன்போடு கற்பித்துக்
கொடுத்த; ஒருவனே - ஆசிரியனே; இத இயல் இயற்றிய -(ஒருவனுக்கு)
நன்மைதரும் இயல்பினைச் செய்த; குரவர்யாரினும் உயரும்’- எல்லாரினும்
மேம்படுவான்; என்பர் - என்று கூறுவார்கள்.