சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ” (திவ்யப் 494.) என்னும் திருப்பாவையைக் காண்க. ‘ஆறிய சிந்தனை’ என்பது, ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்பது போலக் கூறியது. (புறநா.191) ஆசிரியனாதலின் முதலில் வணங்கிப் பின் கூறுவான் என்றார். 125 2500. | ‘சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய் போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் - தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்று ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? |
‘தேன் தரு மலருளான் சிறுவ!- தேனைத் தருகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கும்பிரமதேவனின் புதல்வ!; சான்றவர் ஆக - பெரியோர்களே ஆகுக; தன் குரவர் ஆக- தன் ஆசிரியரே ஆகுக; தாய் போன்றவர் ஆகுக - தாய் முதலியவரே ஆகுக; மெய்ப்புதல்வர் ஆக - சத்தியத்திற் பிறழாத தன் புதல்வர்களே ஆகுக; தான் - ஒருவன்; “செய்வேன்” என்று ஏன்றபின் - (இவர்களிடத்தில்) செய்வேன் என்று சம்மதித்தபின்; அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? - அந்த வார்த்தை முடியாது என்று மறுக்கத்தக்கதன்மை யுடையதோ? (அன்று என்றபடி) தாய் போன்றவர் எனவே தந்தை, தம்முன், அரசன் முதலிய நான்கு குரவர்களைக் குறிப்பிடாராயிற்று, ஒருவரிடம் ஒப்புக்கொண்டால் செய்தே ஆகவேண்டும்; சத்தியம் பிறழ்தல் கூடாது என்றான். 126 2501. | ‘தாய் பணித்து உவந்தன, தந்தை, “செய்க” என ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத் தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ? |
தாய் பணிந்து உவந்தன- தாய் கட்டளையிட்டு மகிழ்ச்சியடைந்தவையும்; தந்தை “செய்க” என ஏய - தந்தை செய்க எனக் கட்டளையிட்டவையும் ஆகிய; எப்பொருள்களும் - எச் செயல்களையும்; இறைஞ்சி - வணங்கி; மேற்கொளா- தலைமேற் கொண்டு நிறைவேற்றாத; தீய அப்புலையனின் - கொடிய அந்தக் கீழ்மகனைவிட; செய்கை தேர்கிலா - நல்லது, தீயது அறியாத; நாய் எனத் திரிவது- நாயாகத் திரிவது; நல்லது அல்லதோ? - நல்லது அல்லாததோ? (நல்லதே). தக்கது, தகாதது அறியம் மக்கட் பிறப்பில் பிறந்துவைத்தும் தாய் தந்தை பணியைநிறைவேற்றாத கீழ்மகனாக இருப்பதைவிட நாய்ப் பிறவியே மேல் என்பதாகும் ‘ஓ’காரம்தேற்றம். 127 |