பக்கம் எண் :

702அயோத்தியா காண்டம்

சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ” (திவ்யப் 494.) என்னும் திருப்பாவையைக்
காண்க. ‘ஆறிய சிந்தனை’ என்பது, ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர்’ என்பது போலக் கூறியது. (புறநா.191) ஆசிரியனாதலின் முதலில்
வணங்கிப் பின் கூறுவான் என்றார்.                               125

2500.‘சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்
போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் -
தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்று
ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ?

     ‘தேன் தரு மலருளான் சிறுவ!- தேனைத் தருகின்ற தாமரை மலரில்
வீற்றிருக்கும்பிரமதேவனின் புதல்வ!; சான்றவர் ஆக - பெரியோர்களே
ஆகுக; தன் குரவர் ஆக- தன் ஆசிரியரே ஆகுக; தாய் போன்றவர்
ஆகுக
- தாய் முதலியவரே ஆகுக; மெய்ப்புதல்வர் ஆக - சத்தியத்திற்
பிறழாத தன் புதல்வர்களே ஆகுக; தான் - ஒருவன்; “செய்வேன்” என்று
ஏன்றபின்
- (இவர்களிடத்தில்) செய்வேன் என்று சம்மதித்தபின்; அவ்
உரை மறுக்கும் ஈட்டதோ?
- அந்த வார்த்தை முடியாது என்று
மறுக்கத்தக்கதன்மை யுடையதோ? (அன்று என்றபடி)

     தாய் போன்றவர் எனவே தந்தை, தம்முன், அரசன் முதலிய நான்கு
குரவர்களைக் குறிப்பிடாராயிற்று, ஒருவரிடம் ஒப்புக்கொண்டால் செய்தே
ஆகவேண்டும்; சத்தியம் பிறழ்தல் கூடாது என்றான்.                 126

2501.‘தாய் பணித்து உவந்தன, தந்தை, “செய்க” என
ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்
தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ?

     தாய் பணிந்து உவந்தன- தாய் கட்டளையிட்டு
மகிழ்ச்சியடைந்தவையும்; தந்தை “செய்க” என ஏய - தந்தை செய்க எனக்
கட்டளையிட்டவையும் ஆகிய; எப்பொருள்களும் - எச் செயல்களையும்;
இறைஞ்சி - வணங்கி; மேற்கொளா- தலைமேற் கொண்டு நிறைவேற்றாத;
தீய அப்புலையனின் - கொடிய அந்தக் கீழ்மகனைவிட; செய்கை
தேர்கிலா
- நல்லது, தீயது அறியாத; நாய் எனத் திரிவது- நாயாகத்
திரிவது; நல்லது அல்லதோ? - நல்லது அல்லாததோ? (நல்லதே).

     தக்கது, தகாதது அறியம் மக்கட் பிறப்பில் பிறந்துவைத்தும் தாய்
தந்தை பணியைநிறைவேற்றாத கீழ்மகனாக இருப்பதைவிட நாய்ப் பிறவியே
மேல் என்பதாகும் ‘ஓ’காரம்தேற்றம்.                             127