‘ஆம் எனில் - அப்படியானால்; ஐய! - தலைவனே; ஏழ் இரண்டு ஆண்டில்- பதினான்கும ஆண்டுகள் கழிந்தவுடன்; நீ -; நாம நீர் நெடுநகர் நண்ணி - (பகைவர்)அஞ்சம்படியான அகழி நீர் சூழ்ந்த பெரிய அயோத்தி நகரை அடைந்து; நானிலம் - பூமியை;கோமுறை புரிகிலை என்னின் - அரசாட்சி செய்திடாயானால்; (யான்) கூர் எரி சாம்- மிக்க நெருப்பில் (வீழ்ந்து) இறந்து படுவேன்; இது சரதம் - இது உண்மை; நின் ஆணை சாற்றினேன் - உன்மேல் ஆணையிட்டுக் கூறினேன். நாமம் - அச்சம், பெருமை என்னும்பொருள்கள். ‘கோவாகி முறை புரிகிலை என்னின்’ எனப் பிரித்தலும் ஒன்று. 133 பரதன் கருத்திற்கு இராமன் இசைதல் 2508. | என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர் துன்பு இலன்; அவனது துணிவை நோக்கினான் அன்பினன், உருகினன்; ‘அன்னது ஆக’ என்றான்- தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான். |
என்பது - என்ற இச் சொற்களை; சொல்லிய - கூறிய; பரதன்-; யாதும் ஓர் துன்பு இலன் - யாதொரு துன்பமும் இல்லாதவனாக ஆனான்; தன் புகழ் தன்னினும் பெரியதன்மையான் - தனது புகழ் தன்னைவிடப் பெரிதாகப் பெற்ற தன்மையுடைய இராமன்; அவனதுதுணிவை நோக்கினான் - பரதனது உறுதியைப் பார்த்து; அன்பினன் உருகினன் - அன்பினால் உருகி; ‘அன்னது ஆக’ என்றான் - அப்படியே ஆகட்டும் என்று கூறி அதனைஉடன்பட்டான். புகழினும் தான் பெரியவன் எனவும் உரைப்பதுண்டு. 134 பரதன், இராமன் திருவடிகளை வேண்டிப் பெற்று முடிமேற் சூடிச் செல்லுதல் 2509. | விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான், ‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என, எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். |
பரதனும் -; வேறு செய்வது ஒன்று இன்மையின் - வேறு செய்யக் கூடியது ஒன்றும்இல்லதமையால்; ‘அரிது’ என எண்ணி - (இராமனைப் பிரித்து இருத்தல்) இயலாது என்றுகருதி; விம்மினன் ஏங்குறவான் - அழுது இளைத்து; ‘திருவடித்தலம் செம்மையின்தந்தீக’ |