பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 707

என- உன் திருவடிநிலைகள் இரண்டையும் செப்பமாக எனக்கு
அளித்தருளுக எனக் கேட்க; (இராமனும்) எம்மையும் தருவன இரண்டும்
நல்கினான்
- எல்லா உலக இன்பங்களையும் தருவனவாகிய தன் இரண்டு
திருவடிம நிலைகளையும் நிலைகளையும் கொடுத்தருளினான்.

     இம்மை, மறுமை என்றாற் போல எம்மை என்பதற்கு எப்பிறவியினும்
(எல்லா வின்பங்களும்தருவன) எனப் பொருள் உரைத்தலும் ஒன்று.    135

2510.அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் -
பொடித் தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.

     தலம் பொடி இலங்குறு பொலம்கொள் மேனியான் பரதன் -
மண்ணின் புழுதி படிந்துவிளங்குகிற பொன்மயமான திருமேனியுடையம
பரதன்; அழுத கண்ணினான்
- அழுத கண்ணுடையனாய்;அடித்தலம்
இரண்டையும்
- இராமனின் இரண்டு திருவடிநிலைகளையும்; ‘முடித்தலம்
இவை’ எனமுறையிற் சூடினான்
- எனக்கு முடிகள் இவையே என்று
கொண்டு முறைமைப்படி தலையின்மேற்சூடிக்கொண்டு; படித்தலத்து
இறைஞ்சினான்
- மண்ணில் விழுந்து; வணங்கிப் போயினான்- மீண்டு
(அயோத்திக்குச்) சென்றான்.

     இராமன் திருவடிநிலைகளையே தனக்கு. மகுடமாகச் சூடிக்
கொண்டான்.                                              136

     யாவரும் மீளுதல்  

2511.ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும்,
சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்,
வான் தரு சேனையும், மற்றும் சுற்றுற,
மூன்று நூல் கிடந்த தோற் முனியும் போயினான்,

     ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் - பெற்ற தாயர் முதலாகிய
கணக்கிட முடியாதசுற்றத்தினரும்; சான்றவர் குழுவொடு- பெரியோர்களும்;
தவத்துளோர்களும் - தவமுனிவர்களும்; வான்தரு சேனையும்- பெருமை
பொருந்திய சேனையும்; மற்றும் -ஏனைய பிறரும்; சுற்றுற - (பரதனைச்)
சூழ்ந்து செல்ல; மூன்று நூல் கிடந்த தோள்முனியும் - முப்புரி நூல்
அணிந்த தோள்களை உடைய வசிட்ட முனிவனும் (உடன்வர); போயினான்-
மீண்டு சென்றான்.

     வடமும், வடத்திற் புரியும், புரியில் நூலும் மும் மூன்றாகவே
அமைதலின் ‘மூன்று நூல்என்றார். ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்
ஞாண்” (திரு முருகு 183.) என்பது காண்க. வான் -உயர்வு, அரசர்க்கு
உயர்வு தருகின்ற சேனை என்பதாம்.                             137