மிகைப் பாடல்கள் குறிப்புரை 1. மந்திரப் படலம் 188. | ‘மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்து, நீ பன்ன அருந்தவம் புரி பருவம் ஈது’ என, கன்ன மூலத்தினில் கழற வந்தென, மின் எனக் கருமை போய் வெளுத்தது - ஓர் மயிர். |
அவனி - பூமி; கன்ன மூலம் - காதின் அடியில், காது அடியில் தலைமயில்நரைத்தல் முதுமைக்கு அடையாளம் ஆகும்; சுழறல் - இடித்துரைத்தல். 189. | தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான் ஆங்கு ஒரு நரையது ஆய் அணுகிற்றாம் என, பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி ஆங்கு அதில் கண்டனன் - அவனி காவலன். |
படிமம் - பிரதிமா என்னும் வடசொல் திரிபு. தன்னுடைய உருவம். (இந்த இரண்டு செய்யுட்களும், ‘மண்ணுறு முரசு இனம்’ எனத் தொடங்கும் முதற் பாடலின்முன், படலத்தின் தொடக்கத்தில் உள்ளன.) |