பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 711

190.எய்திய முனிவரன்
     இணைகொள் தாமரை
செய்ய பூங் கழலவன்
     சென்னி சேர்த்த பின்,
‘வையகத்து அரசரும்
     மதி வல்லாளரும்
வெய்தினில் வருக’ என
     மேயினான் அரோ.

     முனிவரன் - வசிட்டன்; செய்ய பூங்கழலவன் - தயரதன்;
மதிவல்லாளர்- அறிவின் வலிமை படைத்தவர்,  இங்கே அமைச்சர்;
வெய்து - விரைவாக;  அரோ- அசை.                          4-1

191.ஆளும் நல் நெறிக்கு அமைவரும்
     அமைவினன் ஆகி,
நாளும் நல் தவம் புரிந்து,
     நல் நளிர் மதிச் சடையோன்
தாளில் பூசையின் கங்கையைத்
     தந்து, தந்தையரை
மீள்வு இல் இன் உலகு
     ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள்.

     நளிர் மதிச் சடையோன் - சிவபிரான். சிவனை வழிபட்டுக்
கங்கையைக்கொணர்ந்து தன் முன்னோர்கள் ஆய சகரர்களை நல்லுலகு
சேர்ப்பித்தவன்பகீரதன்.                                     66-1

192. ‘நறைக் குழற் சீதையும்
     ஞால நங்கையும்,
மறுத்தும், இங்கு ஒருவற்கு
     மணத்தின்பாலரோ -
கறுத்த மா மிடறுடைக்
     கடவுல் கால வில்
இறுத்தவற்கு அன்றி?’ என்று
     இரட்டர் கூறினார்.

     மறுத்தும் - மீட்டும் - இங்கே ‘வேறும்’ என்பது பொருள்; கடவுள்-
சிவன்; இரட்டர் - இரட்டதேயத்து அரசர்.                       76-1