193. | ‘ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனைப் பூத்தவன் அல்லனேல், புனித வேள்வியைக் காத்தவன் உலகினைக் காத்தல் நன்று’ என, வேத்தவை வியப்புற, விதர்ப்பர் கூறினார். |
பூத்தவன் - திருமால்; வேள்வியைக் காத்தவன் - விசுவாமித்திரனது வேள்வியைக் காத்தளித்த இராமன். 76-2 194. | ‘பெருமையால் உலகினைப் பின்னும் முன்னும் நின்று உரிமையோடு ஒம்புதற்கு உரிமை பூண்ட அத் தருமமே தாங்கலில் தக்கது; ஈண்டு ஒரு கருமம் வேறு இலது’ எனக் கலிங்கர் கூறினார். |
‘தருமமே தாங்கல்’ என்பது இராமனை நினைத்துக் கூறியதாம். 76-3 195. | ‘கேடு அகல் படியினைக் கெடுத்து, கேட இலாத் தாடகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய ஆடக வில்லிக்கே ஆக, பார்!’ எனாத் தோடு அவிழ் மலர் முடித் துருக்கர் சொல்லினார். |
படி - பூமி; ஆடக வில்லி - பொன் வில்லை உடைய இராமன்; ஆடகம்- பொன் வகைகளுள் ஒன்று. ஆடகம், சாம்பூநதம், கிளிச் சிறை, சாதரூபம் என்பவை பொன்னின்நான்கு வகைகள். இவற்றைச் செம்பொன், கரும்பொன், பசும்பொன், வெண்பொன்என்பர். 76-4 |