பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 713

196.‘கற்ற நான்மறையவர்
    கண்ணை, மன்னுயிர்
பெற்ற தாய் என அருள்
    பிறக்கும் வாரியை,
உற்றதேல் உலகினில்
    உறுதி யாது?’ என,
கொற்றவேல் கனை கழல்
    குருக்கள் கூறினார்.

     வாரி - கடல்;  கனை - செருக்கிய;  குருக்கள் - குரு
தேசத்தவர்கள்.                                             76-5

197.‘வாய் நனி புரந்த மா
     மனுவின் நூல் முறைத்
தாய் நனி புரந்தனை,
     தரும வேலினாய்,!
நீ நனி புரத்தலின்
     நெடிது காலம் நின்
சேய் நநி புரக்க!’ எனத்
     தெலுங்கர் கூறினார்.

     வாய்- இடம்; முறைத்தாய்- முறைப்படி; நின் சேய்- இராமன்.  76-6

198. ‘வையமும் வானமும்
     மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப; திகழும்
     யாண்டு எலாம்,
நெய் தவழ் வேலினாய்!
     நிற்கும் வாசகம்;
செய் தவம் பெரிது!; எனச்
     சேரர் கூறினார்.

     நிற்கும் வாசகம் - புகழ்.                                76-7

199.‘பேர் இசை பெற்றனை;
     பெறாதது என், இனி?
சீரியது எண்ணினை;
     செப்புகின்றது என்?