பக்கம் எண் :

714அயோத்தியா காண்டம்

 ஆரிய! நம் குடிக்கு
     அதிப! நீயும் ஓர்
சூரியன் ஆம்’ எனச்
     சோழர் சொல்லினார்.

     ஆரிய - தசரதனை நோக்கிய விளி. மேலோனே என்பதாம். சோழர்
சூரிய குலத்தவர்ஆதலின் ‘நம் குடிக்கு’ என்றார்.                 76-8

200.ஒன்றிய உவகையர்;
     ஒருங்கு சிந்தையர்,
தென் தமிழ் சேண் உற
     வளர்த்த தென்னரும்,
‘என்றும் நின் புகழொடு
     தருமம் ஏமுற,
நின்றது நிலை’ என
     நினைந்து கூறினார்.

     தென்னர்- பாண்டியர்; ஏமுற- ஏமம்; உற- பாதுகாப்பு அடைய. 76-9

201.‘வாள் தொழில் உழவ! நீ
     உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது;
     உரிமை மைந்தனைப்
பூட்டினை ஆதலின்,
     பொரு இல் நல் நெறி
காட்டினை; நன்று’ எனக்
     கங்கர் கூறினார்.

     வாள் தொழில் உழவ! - தயரதனை நோக்கிய விளி. “வில்லேர்
உழவர்” என்பது போல.                                      76-10

202.‘தொழு கழல் வேந்த! நின்
     தொல் குலத்துளோர்
முழு முதல் இழித்தகை
     முறைமை ஆக்கி, ஈண்டு
எழு முகில் வண்ணனுக்கு
     அளித்த இச் செல்வம்
விழுமிது, பெரிது!’ என
     மிலேச்சர் கூறினார்.