அறுபதினாயிரம் மனைவியர்களும் தீக்குளித்தனர். 136-1 11. கங்கை காண் படலம் | 238. | வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான்; வணங்காமுன், சந்த நெடுந் திரள் புயத்தான் தழுவினான்; தழுவியபின், இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் - இமையோர்தம் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய்! |
2334 ஆம் பாடலின் மாற்றுருவம் இப்பாடல். 32-1 | 239. | ஏறினர் இளவலோடு, இரங்கு நெஞ்சு கொண்டு ஊறிய தாயரும் உரிய சுற்றமும்; பேறு உள பெரு நதி நீங்கி, பெட்போடும் கூறு தென் கரையிடைக் குழீஇய போதிலே. |
பேறு உள பெருநதி - புண்ணியப் பயன் உடைய கங்கை. 63-1 | 240. | தன் அன தம்பியும், தாயர் மூவரும், சொன்ன தேர் வலவனும், தூய தோழனும், துன்னினர் ஏறலும், துழா துடுப்பு எனும் நல்நயக் காலினால் நடத்தல் மேயினான். |
தம்பி - சத்துருக்கனன்; தேர் வலவன் - சுமந்திரன்; தோழன் - குகன்; துழா துடுப்பு - துழாவுகின்ற துடுப்பு. இனி துழாவும், துடுப்பும் என்னும் இரண்டுகால்களால் படகை நடத்துதல் என்றும் ஆம். துழா என்பது நீரைத் துழாவும் நீண்ட கோல் ஆகும். துடுப்பு - மட்டை ஆகும். 63-2 |