| 241. | அன்ன காதல் அருந் தவர், ‘ஆண் தகை! நின்னை ஒப்பவர் யார் உளர், நீ அலால்?’ என்ன வாழ்த்திடும் ஏல்வையில், இரவியும் பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே. |
ஏல்வை - பொழுது. 5-1 | 242. | இன்ன ஆய எறி கடல் சேனையும், மன்னர் யாவரும், மன் இளந் தோன்றலும், அன்ன மா முனியோடு எழுந்து, ஆண்தகை துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம். |
ஆண்தகை துன்னு - இராமன் தங்கியுள்ள. 19-1 | 243. | ‘ஐய! நின்னுடைய அன்னை மூவரும், வைய மன்னரும், மற்றும் மாக்களும். துய்ய நாடு ஒரீஇத் தோன்றினார்; அவர்க்கு உய்ய நல் அருள் உதவுவாய்’ என்றான். |
ஒரீஇ - நீங்கி. 89-1 | 244. | கங்குல் வந்திடக் கண்டு, யாவரும் அங்கணே துயில் அமைய, ஆர் இருள் |
|