பக்கம் எண் :

728அயோத்தியா காண்டம்

  பொங்கு வெம் பகை,
     போக, மற்றை நாள்,
செங் கதிர் குண
     திசையில் தோன்றினான்.

     அங்கணே - அவ்விடத்தே.                             94-1

245.‘வானின் நுந்தை சொல்
     மரபினால் உடைத்
தானம் நின்னது என்று
     இயைந்த தன்மையால்,
ஊனினில் பிறந்து
     உரிமையாகையின்
யான் அது ஆள்கிலேன்’ என,
     அவன் சொல்வான்.

     2485 ஆம் பாடலின் மாற்றுவரும் இது.  இராமன் கூறும் பாட்டைத்
திருப்பிப் பரதன் கூற்றாகமாற்றியதாகும். தயரதன் சபையில் கூறிய
சொல்லால் அரசு நின்னதாயிற்று;  ஊனினில் பிறந்து
- தயரதனிடத்தில்
பிறந்து;  நீ உரிமையாகையின் - நீ மூத்தவனாய் உரிமைபெற்றபடியால்.
யான் அது ஆள்கிலேன் என்றான் பரதன் என்க. இதை இராமன்
கூற்றாகவும்உரைக்கலாம்.                                     111-1