யும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும் ;  தெரிந்துகொண்டு -     ஆராய்ந்து அறிந்துகொண்டு ;  பால் வரும் உறுதி யாவும் - அவ்     வாராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ;  தலைவற்குப்     பயக்கும்நீரார் - தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மையுடையவர்கள்.      இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை உரைக்கப்பட்டது. இடன் -     கடைப்போலி. நுனிதல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த     அந்தப் பகுதிகளால்விளையும் நன்மை.     கருவியும் காலமும் செய்கையும் செய்யும்         அருவினையும் மாண்ட தமைச்சு      அருவினை என்ப உளவோ கருவியான்     காலம் அறிந்து செயின்                             (குறள், 631, 483)                    7 |     1321. | தம்உயிர்க்கு     இறுதி எண்ணார் ;       தலைமகன் வெகுண்ட போதும்,     வெம்மையைத் தாங்கி, நீதி      விடாதுநின்று, உரைக்கும் வீரர் ;      செம்மையின் திறம்பல் செல்லாத்      தேற்றத்தார் ; தெரியும் காலம்     மும்மையும் உணர வல்லார் ;       ஒருமையே மொழியும் நீரார். |  
      தலைமகன் வெகுண்ட போதும் - அரசன் சீற்றங்கொண்ட     காலத்திலும் ; தம் உயிர்க்கு இறுதி எண்ணார் - இதனைச் சொன்னால்     தம் உயிர்க்கு அழிவு விளையும்என்றுகூட நினையாதவராய் ;      வெம்மையைத் தாங்கி - அவனது சீற்றத்தின் கொடுமையை ஏற்றுக்கொண்டு ;  விடாதுநின்று நீதி உரைக்கும் வீரர் - தம் கடமையை     விட்டுவிடாமல்உறுதியாக நின்று உரிய நீதிகளை எடுத்துச்சொல்லும் துணிவு     மிக்கவர்கள் ;  செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் -     நன்னெறியிலிருந்து வழுவுதல் இல்லாததெளிவுடையவர்கள் ;  தெரியும்     மும்மைக் காலமும் - அறியத்தக்க முக்காலநிகழ்வுகளையும் ;  உணர     வல்லார் - உணரத்தக்க ஆற்றல் பொருந்தியவர்கள் ; ஒருமையே     மொழியும் நீரார் - உண்மையையே பேசும் இயல்பினையுடையவர்கள்.              இறுதி - அழிவு ;  ஆபத்து எண்ணார் - முற்றெச்சம். தாம் கொண்ட முடிவில் ஊற்றமாய் நின்று எதிர்ப்புகளை வீழ்த்தி மேம்படுதலால் வீரர் என்று     புகழப்பெற்றனர்என்க. காலம் நிகழ்ச்சியைச் சுட்டிற்று. ஒன்றல்லது     இரண்டன்மையின் ஒருமை என்பது உண்மையைச்சுட்டியது. ஒருமையே     மொழியும்  |