யும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும் ; தெரிந்துகொண்டு - ஆராய்ந்து அறிந்துகொண்டு ; பால் வரும் உறுதி யாவும் - அவ் வாராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ; தலைவற்குப் பயக்கும்நீரார் - தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மையுடையவர்கள். இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை உரைக்கப்பட்டது. இடன் - கடைப்போலி. நுனிதல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த அந்தப் பகுதிகளால்விளையும் நன்மை. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் (குறள், 631, 483) 7 1321. | தம்உயிர்க்கு இறுதி எண்ணார் ; தலைமகன் வெகுண்ட போதும், வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று, உரைக்கும் வீரர் ; செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் ; தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார் ; ஒருமையே மொழியும் நீரார். |
தலைமகன் வெகுண்ட போதும் - அரசன் சீற்றங்கொண்ட காலத்திலும் ; தம் உயிர்க்கு இறுதி எண்ணார் - இதனைச் சொன்னால் தம் உயிர்க்கு அழிவு விளையும்என்றுகூட நினையாதவராய் ; வெம்மையைத் தாங்கி - அவனது சீற்றத்தின் கொடுமையை ஏற்றுக்கொண்டு ; விடாதுநின்று நீதி உரைக்கும் வீரர் - தம் கடமையை விட்டுவிடாமல்உறுதியாக நின்று உரிய நீதிகளை எடுத்துச்சொல்லும் துணிவு மிக்கவர்கள் ; செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் - நன்னெறியிலிருந்து வழுவுதல் இல்லாததெளிவுடையவர்கள் ; தெரியும் மும்மைக் காலமும் - அறியத்தக்க முக்காலநிகழ்வுகளையும் ; உணர வல்லார் - உணரத்தக்க ஆற்றல் பொருந்தியவர்கள் ; ஒருமையே மொழியும் நீரார் - உண்மையையே பேசும் இயல்பினையுடையவர்கள். இறுதி - அழிவு ; ஆபத்து எண்ணார் - முற்றெச்சம். தாம் கொண்ட முடிவில் ஊற்றமாய் நின்று எதிர்ப்புகளை வீழ்த்தி மேம்படுதலால் வீரர் என்று புகழப்பெற்றனர்என்க. காலம் நிகழ்ச்சியைச் சுட்டிற்று. ஒன்றல்லது இரண்டன்மையின் ஒருமை என்பது உண்மையைச்சுட்டியது. ஒருமையே மொழியும் |