காளிமை - கருமை. விராதனின் நிறம் கறுப்பு; வடிவோ கொடுமை; செயலோ தீவினை; அவனுக்குநஞ்சும் தீயும் கலிகாலமும் உவமை. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. 13 | 2530. | செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச் சுற்றி, வாரண உரித் தொகுதி நீவி தொடர, கொற்றம் மேவு திசை யானையின் மணிக் குலமுடைக் கற்றை மாசுணம் விரித்து வரி, கச்சு ஒளிரவே |
செற்ற - (தான்) கொன்ற; வாள் உழுவை வன் செறி அதள் - கொடிய புலியின் வலிய நெருங்கியதோல்; திருகுற - (தன் மார்பில்) சுருண்டு விளங்க; சுற்றி - சுற்றி உடுத்துக்கொண்டு; வாரண உரித் தொகுதி - பல யானைகளின் தோற்கூட்டம்; நீவி தொடர - அரையில் கட்டிய ஆடையாகத் தொடர்ந்திருக்க; கொற்றம் மேவு திசை யானையின்- வெற்றி பொருந்திய எட்டுத்திக்கு யானைகளின்; மணிக்குலம் உடை - மணிக்கூட்டங்களைஉடைய; கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு - பெரிய மலைப்பாம்பை விரித்து இழுத்துக்கட்டிய இடைக்கச்சு; ஒளிர - விளங்க; ஏ - ஈற்றசை. விராதன் கொன்ற புலியின் தோல் அவனுக்கு மேலாடையாகவும், யானைத் தோல் அரையில்கட்டும் ஆடையாகவும், திசையானைகளின் மணிகளைக் கோத்த மலைப்பாம்பு கச்சாகவும் விளங்கின.நீவி - ஆடை, கொய்சகமும் ஆம். 14 | 2531. | செங் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் வெங் கண் அங்க வலயங்களும், இலங்க விரவிச் சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக் கங்கணங்களும், இலங்கிய கரம் பிறழவே |
செங்கண் அங்க அரவின்- சிவந்த கண்களையும் (நீண்ட) உடலையும் உடைய பாம்புகளுடைய; பொரு இல் - ஒப்பில்லாத;செம்மணி விராய் - சிவந்த மாணிக்கங்கள் கலந்து அமைக்கப்பட்டு; வெங்கண் அங்க வலயங்களும் - கொடிய தன்மை உடைய உறுப்புகளில் அணியும் தோள் வளைகளும்; இலங்க - விளங்கி அசைய; விரவி - பொருந்தி; சங்கு |