| எண் தகு குணத்தினை;' எனக் கொடு, உயர் சென்னித் துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்: |
உயர் சென்னித் துண்டமதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்- தன் உயர்ந்த தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானைப் போன்ற அகத்திய முனிவர் சொல்வாரானார்; எண்தகு குணத்தினை - யாவரும் மதிக்கத்தக்க நற்பண்புகளுடைய இராமனே! ; தண்டக வனத்து உறைதி என்று உரைதரக் கொண்டு - தண்டகாரணியத்தில் நீ எழுந்தருளியிருக்கிறாய் என (இங்கு வரும் முனிவர்கள்) கூறிய சொல்லைக் கேட்டு; இத்திசை உண்டு வரவு எனக் கொடு - இத்திசைக்கு உனது வருகை உண்டு என்று கொண்டு; பெரிது உவந்தேன் - மிக மகிழ்ந்திருந்தேன்; என - அசை. எண் தகு குணத்தினை - எட்டு மேலான பண்புகளைக் குறிக்கும் என்பர். (குறள். 9) துண்டமதி - மதித்துண்டு, இளம்பிறை மதி. அகத்தியரைச் சிவபிரானுக்கு ஒப்பிடல் முன்னர்க் காணப்படுகிறது. 'ஈசன் நிகர் ஆய்' (2670); உண்டு வரவு எனக் கருதியதை ஒட்டி இராமன் எழுந்தருளியமை குறிப்பால் பெறப்படும். 51 2682. | 'ஈண்டு உறைதி, ஐய! இனி, இவ் வயின் இருந்தால், வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய்; தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால், மாண்டு உக மலைந்து, எமர்மனத் துயர் துடைப்பாய்; |
ஐய! ஈண்டு உறைதி - ஐயனே! இங்கு நீ தங்கி இருப்பாயாக; இனி இவ்வயின் இருந்தால் - இனிமேல் இவ்விடத்தில் நீ இருந்தால், வேண்டியன மாதவம் விரும்பினை முடிப்பாய் - நீ விரும்பிய பெரிய தவங்களை விரும்பியவாறே செய்து முடிப்பாய்; தூண்டுசின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் - தூண்டப்பட்ட கோபத்தோடு கூடிய வாளேந்திய அரக்கர்கள் வந்தனர் என்றால்; மாண்டுஉக, மலைந்து - அவர்கள் அழிந்து கீழே சிதறப் போர் செய்து; எமர் மனத்துயர் துடைப்பாய் - எம்போன்ற முனிவர்களின் மனத்துன்பத்தைப் போக்குவாய். வேண்டியன மாதவம் என்பது இராமனின் சிறிய தாய் கைகேயி கூறிய வண்ணம் ஆகும். தவங்கள் என்பர் (1601). வாள்நிருதர் - வாள்போல் கொடிய அரக்கர் எனலுமாம். வாள் எனில் கொடுமையும் ஆம். நீ இங்கே |