பக்கம் எண் :

12ஆரணிய காண்டம்

    பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு - ஐந்து பூதங்களும் ஓர்
உருவம் எடுத்துக்கொண்டு; புதிது என்று ஓத ஒத்த உருவத்தன் -
புதுமையான ஒரு வடிவு எடுத்து இவ்வாறு வந்தனஎன்று சொல்லத் தக்க
வடிவுடையவனும்; உரும் ஒத்த குரலன் - இடி ஓசையைப் போன்ற
குரலோசை உடையவனும்; அயன் காதலித்து அளித்த கடையிட்ட பாத
கணித லக்கம் -
பிரமன்மகிழ்ந்து கொடுத்த கடையிலே கணக்கிட்டு வைத்த
கால் இலட்சம்; மதவெற்பு அவை படைத்தவலியான் - மதயானைகளாம்
அவ்விலங்குகள் அடைந்த வலிமையை உடையவன்.

     விராதனின் வலிய உருவமும் கொடிய குரலும் கூறப்பட்டுள்ளன.
கடையிட்ட பாதலக்கம் ஒன்றேகால் இலட்சம். வெற்பு - ஆகுபெயர்.     17

2534.சார வந்து, அயல் விலங்கினன்-
     மரங்கள் தரையில்
பேர, வன் கிரி பிளந்து உக,
     வளர்ந்து இகல் பெறா
வீர வெஞ் சிலையினோர் எதிர்,
     விராதன் எனும் அக்
கோர வெங் கண் உரும்ஏறு அன
     கொடுந் தொழிலினான்.

    விராதன் எனும் அக்கோர வெங்கண் உரும் ஏறு அன கொடுந்
தொழி லினான் -
விராதன் என்று சொல்லப்படும் அந்த அச்சமூட்டும்
கொடிய கண்களையும் பேரிடி போன்ற கொடியதொழிலையுமுடையவன்;
(வரும் வேகத்தால்); மரங்கள் தரையில் பேர - மரங்கள்நிலத்தில் நின்ற
இடம் விட்டுப் பெயர்ந்து விழவும்; வன்கிரி பிளந்துக - வலியமலைகள்
பிளவுண்டு சிதறவும்; வளர்ந்து இகல் பெறாவீர வெஞ்சிலையினோர் எதிர்
சார வந்துஅயல் விலங்கினன் -
பேருருக்கொண்டு வளர்ந்து போரைப்
பெறாத வீரமும் கொடிய வில்லும்உடைய இராமலக்குவர் முன்னே அருகில்
வந்து எதிராகக் குறுக்கிட்டு நின்றான்.

     விலங்கினன் - குறுக்கிட்டான். விராதன் - எதிலும் நிறைவு
பெறாதவன்.                                                 18

விராதன், சீதையைக் கவர்ந்து செல்லுதல்

2535.நில்லும், நில்லும் என வந்து, நிணம்
     உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு
     வாய் முழை திறந்து,
அல்லி புல்லும்அலர் அன்னம்
     அனையாளை, ஒரு கை,