பக்கம் எண் :

சடாயு காண் படலம் 123

ஏக்கம் - ஏமாற்றம் தயரதன் சடாயுவிடம் முன்னர் 'நீ உடல் தான் ஆவி'
(2712) என்று கூறியதை நினைவிற் கொள்வதால் சடாயுவுக்கு ஏற்பட்ட
ஏமாற்றத்தை இது குறிக்கும்.

     உறக்கம் - சாவு எனலுமாம். பின்வரும் பாடல் இதைக் காட்டும்
(2709).                                                       19

2709.தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம்
கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்,
அழிவுறு நெஞ்சினன், அரற்றினான்அரோ.

    இருவரும் - இராமலக்குவராம் இருவரும்; தடக்கையால் தழுவினர்
எடுத்தனர் -
பெரிய கைகளால் தழுவி எடுத்தவர்களாய்; கண்ணின்
நீரினால் முகம் கழுவினர் -
கண்ணீரால் சடாயுவின் முகத்தைக்
கழுவினார்கள்; வழுவிய இன்உயிர் வந்த மன்னனும் - நீங்கியது எனக்
கருதப் பெற்ற இனிய உயிர் திரும்பவும் வரப் பெற்ற கழுகரசனும்; அழிவுறு
நெஞ்சினன் அரற்றினான் -
மனம் அழிந்தவனாய்ப் பின்வருமாறு
வாய்விட்டுப் புலம்பினான்; அரோ - ஈற்றசை.

     தயரதனின் மரணத்தைக் கேட்ட சடாயு உணர்வு நீங்கினார். அவரைத்
தழுவி எடுத்துத் தம் கண்ணீரால் நீராட்டினர் இராமலக்குவர். அவர்
அவ்வாறு ஆவன செய்ததால் சடாயுவுக்கு மூர்ச்சை தெளிந்து உணர்வு
வந்தது. தம் நண்பன் இறந்த துன்பம் பெருக அவர் புலம்பலானார். தடக்கை
- முழந்தாள் அளவு நீண்டகை, கண்ணீராற் கழுவுதல், பரதன் வசிட்ட
முனிவனோடு தயரதனின் உருவைக் கண்டழுத நிலையில் 'கண்ண நீரினால்
கழுவி ஆட்டினான்' என்ற நிலையோடு ஒப்பிடற் குரியது (2225).        20

அறுசீர் ஆசிரிய விருத்தம்

2710.'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக்குடைக்கும்,
     பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும், உடுபதியும்,
     கடல் இடமும், களித்து வாழ-
புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே!
     மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!-
இரவலரும், நல் அறமும், யானும், இனி
     என் பட நீத்து ஏகினாயே?

    புரவலர் தம் புரவலனே - மன்னர்க்கெல்லாம் மன்னனே!, பொய்ப்
பகையே -
பொய்க்குப் பகைவனே!; மெய்க்கு அணியே - உண்மைக்கு
அணிகலம் ஆனவனே!; புகழின் வாழ்வே - புகழுக்கு வாழ்விடமாய்
இருப்பவனே!; நின்தன்பரவல் அரும் கொடைக்கும் - உன்னுடைய
புகழ்வதற்குரிய ஈகைக்கும்; பனிக்குடைக்கும் - குளிர்ந்த வெண் கொற்றக்