| | சொல்லும் எல்லையில், முகந்து உயர் விசும்பு தொடர |
நிணம் உண்ட நெடுவெண் பல்லும் வல்எயிறும் - தசையைப் புசித்த நீண்ட வெண்ணிறப் பற்களும் வலிய கோரப்பற்களும்; மின்னு பகுவாய் முழைதிறந்து - விளங்கும் பிளந்த வாயாகிய குகையைத் திறந்து; ‘நில்லும் நில்லும்’ எனச்சொல்லும் எல்லையில் - ‘நில்லுங்கள், நில்லுங்கள்’ என்று சொன்ன அளவில்; அல்லிபுல்லும் அலர் அன்னம் அனையாளை - அகவிதழ்கள் நெருங்கிய தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னப் பறவை போன்ற சீதையை; வந்து ஒருகை முகந்து உயர்விசும்பு தொடர - எதிர் வந்துஒருகையால் எடுத்து உயர்ந்த வானத்தில் தொடர்ந்து செல்ல; எயிறு - பல்லின் விளிம்பும் ஆம். நில்லும் நில்லும் - அடுக்கு. அன்னம் -ஆகுபெயர். 19 | 2536. | காளை மைந்தர் அது கண்டு, கதம் வந்து கதுவ, தோளில் வெஞ் சிலை இடங் கொடு தொடர்ந்து, சுடர் வாய் வாளி தங்கிய வலங் கையவர், ‘வஞ்சனை; அடா! மீள்தி; எங்கு அகல்தி’ என்பது விளம்ப, அவனும் |
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ - இளம் எருது போன்ற இராமலக்குவர் அதனைப் பார்த்து, சினம் பிறந்து பற்றி; தோளில் வெஞ்சிலை இடங்கொடு - தோளிலே மாட்டிய கொடிய வில்லைத் தம் இடக்கையில் பிடித்துக்கொண்டு; சுடர் வாய் வாளி தங்கிய வலங் கையவர் - ஒளி பொருந்திய அம்புகள் கொண்டவலக்கையினராய்; தொடர்ந்து - அவ்விராதனைப் பின்தொடர்ந்து, அடா! வஞ்சனைமீள்தி எங்கு அகல்தி - ஏ அற்பனே! இச்செயல் வஞ்சகமானது; திரும்புவாயாக! நீ எங்கேசெல்கிறாய்?, என்பது விளம்ப - என்னும் சொற்களைக் கூற; அவனும் - அவ்வரக்கனும். காளை - பெருமிதம், வலிமை, நடை முதலியவற்றில் சிறந்ததால் ஆடவர்க்கு உவமை. அகல்தி -முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று. 20 | 2537. | ‘ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்; |
|