பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 13

  சொல்லும் எல்லையில், முகந்து உயர்
     விசும்பு தொடர

    நிணம் உண்ட நெடுவெண் பல்லும் வல்எயிறும் - தசையைப்
புசித்த நீண்ட வெண்ணிறப் பற்களும் வலிய கோரப்பற்களும்; மின்னு
பகுவாய் முழைதிறந்து -
விளங்கும் பிளந்த வாயாகிய குகையைத் திறந்து;
‘நில்லும் நில்லும்’ எனச்சொல்லும் எல்லையில் - ‘நில்லுங்கள்,
நில்லுங்கள்’ என்று சொன்ன அளவில்; அல்லிபுல்லும் அலர் அன்னம்
அனையாளை -
அகவிதழ்கள் நெருங்கிய தாமரை மலரில் வீற்றிருக்கும்
அன்னப் பறவை போன்ற சீதையை; வந்து ஒருகை முகந்து உயர்விசும்பு
தொடர -
எதிர் வந்துஒருகையால் எடுத்து உயர்ந்த வானத்தில் தொடர்ந்து
செல்ல;

     எயிறு - பல்லின் விளிம்பும் ஆம். நில்லும் நில்லும் - அடுக்கு.
அன்னம் -ஆகுபெயர்.                                         19

2536.காளை மைந்தர் அது கண்டு,
     கதம் வந்து கதுவ,
தோளில் வெஞ் சிலை இடங் கொடு
     தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங் கையவர்,
     ‘வஞ்சனை; அடா!
மீள்தி; எங்கு அகல்தி’ என்பது
     விளம்ப, அவனும்

    காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ - இளம் எருது
போன்ற இராமலக்குவர் அதனைப் பார்த்து, சினம் பிறந்து பற்றி; தோளில்
வெஞ்சிலை இடங்கொடு -
தோளிலே மாட்டிய கொடிய வில்லைத் தம்
இடக்கையில் பிடித்துக்கொண்டு; சுடர் வாய் வாளி தங்கிய வலங்
கையவர் -
ஒளி பொருந்திய அம்புகள் கொண்டவலக்கையினராய்;
தொடர்ந்து - அவ்விராதனைப் பின்தொடர்ந்து, அடா! வஞ்சனைமீள்தி
எங்கு அகல்தி -
ஏ அற்பனே! இச்செயல் வஞ்சகமானது; திரும்புவாயாக! நீ
எங்கேசெல்கிறாய்?, என்பது விளம்ப - என்னும் சொற்களைக் கூற;
அவனும் - அவ்வரக்கனும்.

     காளை - பெருமிதம், வலிமை, நடை முதலியவற்றில் சிறந்ததால்
ஆடவர்க்கு உவமை. அகல்தி -முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று. 20

2537.‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்;