எண்ணம் குறிப்பாக உணரப்பெறுகிறது. 'ஏந்து ஞாலம்' என்பது வழி வழி உரிமையுடன் ஆண்டு வரும் நில உலகம். புந்தி - புத்தி, இங்கு மனம் எனவும் கொள்ளலாம். கட்டுரை என்பது மனத்திலுள்ள பொருளை வகைப்படுத்தி முறையாகத் தொகுத்துரைத்தல். 31 2721. | 'தேவர், தானவர், திண் திறல் நாகர், வேறு ஏவர் ஆக, இடர் இழைத்தார்எனின்,- பூ அராவு பொலங் கதிர் வேலினீர்!- சாவர் ஆக்கி, தருவென் அரசு' என்றான். | பூ அராவு பொலங்கதிர் வேலினீர் - கூராகத் தீட்டப் பெற்றுப் பொன் ஒளி வீசும் வேல்படையைக் கொண்டவர்களே!; தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் - தேவர்களாயினும் அசுரர்களாயினும் நாகலோகத்தவராயினும் வேறு ஏவராயினும் உங்களுக்குத் துன்பம் செய்தார் என்றால்; சாவர் ஆக்கி அரசு தருவென் என்றான் - அவர்களை மாண்டவராக்கி உங்கள் அரசை மீட்டுக் கொடுப்பேன் என உறுதி கூறினார் (சடாயு). பூ - கூர்மை. பூத்தொழில் அமையுமாறு பல சிற்பத் தொழில் பட அராவுதல் என்றும் கொள்வர். பூ அராவு வேற் புரந்தரன் (3017) என்பார் பின்னரும், ஏவர் என்றதால் பிற மனிதர், கந்தருவர் போன்றவரைக் குறிக்கிறது. திண்திறல் - ஒருபொருட் பன்மொழி. 32 இராமன் குறிப்பினால் இலக்குவன் விடையிறுத்தல் 2722. | தாதை கூறலும், தம்பியை நோக்கினான் சீதை கேள்வன்; அவனும், தன் சிற்றவை- மாதரால் வந்த செய்கை, வரம்பு இலா ஓத வேலை, ஒழிவு இன்று உணர்த்தினான். | தாதை கூறலும் - தந்தை போன்ற சடாயு அவ்வாறு சொன்னதும்; சீதை கேள்வன் தம்பியை நோக்கினான் - சீதையின் கணவனாம் இராமன் தன் தம்பியாம் இலக்குவனைக் குறிப்பால் பார்த்தான்; அவனும் தன் |