பக்கம் எண் :

216ஆரணிய காண்டம்

     ஒற்றுதல் மேலும் இரத்தம் பெருகாமலிருப்பதற்காம். உலை உறு
தீயைப் பற்றி - உலைமுகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே (527)
எனவும் 'கொல்லன் ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான்
(1506) எனவும் வருதல் கொண்டு நன்குணரலாம். சுற்றும் ஓடும் எனத் தனித்
தனியாகவும் பொருள் காண்பர்.                                 99

2831. ஊற்றும் மிக்க நீர் அருவியின்
     ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள்,
     தேவரும் இரிய,
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர்
     பெயர் எலாம் கூறி,
ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி
     நின்று, அழைத்தாள்.

    ஊற்றும் மிக்க நீர் அருவியின் - பொழிகின்ற மிகுந்த நீருள்ள
அருவி போல; ஒழுகிய குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள் -
வழிந்தோடும் இரத்தச் சேறாம் நீர்ப் பெருக்கில் அலைபவளாம்
சூர்ப்பணகை; ஆற்று கிற்கிலள் - தன்னால் பொறுக்க முடியாதவளாய்;
தேவரும் இரிய - அவள் அலறலைக் கேட்டுத் தேவர்களும் நிலை
குலைந்து ஓட; கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம்
கூறி-
யமனும் அஞ்சும் தன் குலத்தில் பிறந்த அரக்கர் பெயர்களை
எல்லாம்எடுத்துக் கூறி; பற்பல பன்னி நின்று அழைத்தாள் - பல
பலவாறுவிளக்கமாகக் கூறி நின்று கூப்பிட்டாள்.

     ஊற்றும் - இடைவிடாது பொழியும், தேவரும் அவள் குரல் கேட்டு
அஞ்சி ஓடினர்; யமனும் அது கேட்டு மனம் துணுக்குற்றான் என்பதால்
அவளது குரலின் ஆற்றல் புலனாம். பன்னுதல் - மீண்டும் மீண்டும்
கூறுதல், பெருவெள்ளமாய் இரத்தம் பெருகியதால் அவள் நின்ற இடம்
சேறாயிற்று.

     தேவரும், கூற்றும் - என்பனவற்றில் உள்ள உம்மைகள் உயர்வு
சிறப்பின.                                                   100

உறவினரைக் கூவி அழைத்தல்

கலி விருத்தம்

2832.'நிலை எடுத்து, நெடு நிலத்து
     நீ இருக்க, தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது
     அன்றோ? தேவர் எதிர்