பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 23

    மேருவினை நாள் தொறும் வலம் செய்து வந்து உழல்வோர்
இந்து சூரியரை ஒத்து -
மேருமலையைத் தினமும் வலமாகச் சுற்றித்
திரிபவர்களாம் சந்திர சூரியர்களைப் போன்று; இருவரும் பொலிய -
இராமலக்குவர் அவன் தோள்கள் மீது விளங்க; முந்து வான் முகடு உற -
மேல் உள்ள வானத்தின் உச்சியைப் பொருந்த; கடிது முட்டி - வேகமாக
முட்டிக்கொண்டு; சிந்து சோரியொடு - வழியும் இரத்தத்தோடு; முடுகிச்
சாரிகை திரிந்தனன்-
(விராதன்) வேகமாக வட்ட மிட்டுச் சுற்றினான்.
அரோ - அசை; ஏ - ஈற்றசை.

     மேருமலை அரக்கனுக்கும், சந்திர சூரியர் இராமலக்குவர்க்கும் உவமை.
சந்திர சூரியர்மேருவை வலமாகச் சுற்றுதல் என்பது புராண மரபு. முந்து
வான் என்பதை மற்றப் பூதங்களுக்கு முன்வைத்துஎண்ணப் பெறும் வானம்
என்றுமாம்.                                                   36

2553.சுவண வண்ணனொடு கண்ணன் உறை
     தோளன் விசை தோய்
அவண விண்ணிடை நிமிர்ந்து
     படர்கின்றவன், அறம்
சிவண, தன்ன சிறைமுன் அவரொடு,
     ஏகு செலவத்து
உவணன் என்னும் நெடு மன்னவனும்
     ஒத்தனன் அரோ.

    சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் - பொன்
நிறமுள்ள இலக்குவனோடு இராமன் விளங்கிய தோளை உடைய விராதன்;
விசைதோய் - வேகமிக்கு; அவண விண்ணிடை நிமிர்ந்து
படர்கின்றவன் -
அப் புறத்ததான ஆகாயத்தில்எழுந்து செல்கின்றவனாம்
அவ் வரக்கன்; அறம் சிவணது அன்ன - தருமம் வடிவெடுத்ததைப்
போன்ற; சிறை - இறக்கைகளோடு; முன் அவரொடு ஏகு செலவத்து -
முன்னம் பலராமன்கண்ணனொடு செல்கின்றதை உடைய; உவ ணன்
என்னும் நெடுமன்னவனும் ஒத்தனன் -
கருடன்என்னும் சிறப் புடை
மன்னவனைப் போன்று விளங்கினான்.

     இங்கு விராதனைக் கருடனாகவும் இராமலக்குவரைப் பலராமன்
கண்ணனாகவும் உவமிக்கப்பெற்றுளது. கருடன் தருமத்தின் வடிவு என்பர்.
இராமனைக் கண்ணன் என்றது கருணை உடையவன் என்பதுகுறித்துமாம்.
இராமலக்குவர் முன்னவதாரம். கண்ணன், பலராமன், பின்னவதாரம்;
இவ்வாறுகூறுதல் கவி மரபு.
சுவண வண்ணன் - பொன் வண்ணனாம்
சிவனைக் குறிப்பர் சிலர். அப்போதுசங்கர நாராயணன் உவமை ஆவர்.  37

2554.மா தயா உடைய தன் கணவன்,
     வஞ்சன் வலியின்