மன்மதனைப் போன்ற அழகான வடிவுடையவர்கள்; தரும நீரர் - தருமநெறியில் நடப்பவர்கள்; தயரதன் காதலர் - தசரதச் சக்கரவர்த்தியின் மைந்தர்கள்; செருவில் நேரும் - போரில் எதிர்ப்படும்; நிருதரைத் தேடுவார் - அரக்கர்களைத் தேடித் திரிந்து கொண்டிருப்பவர்; மரவுரியுடுத்தமையும் சடைமுடி தரித்தமையும் பற்றித் 'தாபதர்' என்றாள். தரும நீரர் - இராமலக்குவரின் பேரழகும், பெருங்குணமும் விளங்கும். 4 2879. | 'ஒன்றும் நோக்கலர் உன் வலி; ஓங்கு அறன் நின்று நோக்கி, நிறுத்தும் நினைப் பினார்; "வென்றி வேற் கை நிருதரை வேர் அறக் கொன்று நீக்குதும்" என்று உணர் கொள்கையார். |
உன் வலி - உனது வலிமையை; ஒன்றும் நோக்கலர் - சிறிதும் கருதுகின்றார்களில்லை; ஓங்கு அறன் நின்று நோக்கி - மேலான தரும வழிகளில் தாமும் நின்று ஆராய்ந்து; நிறுத்தும் நினைப்பினார் - அத் தருமத்தை எங்கும் நிலைபெறச் செய்யும் கருத்துடையவர்; வென்றி வேல் கை நிருதரை - வெற்றி தரும் வேலேந்திய கைகளையுடைய அரக்கரை; வேர் அற - அடியோடு; கொன்று நீக்குதும் - 'கொன்று தொலைப்போம்'; என்று உணர் - என்று தீர்மானித்துள்ள; கொள்கையார் - கோட்பாடு உடையவர்கள். அவர்கள் உன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை; அறமாகிய பயிரைச் செழிக்க வைக்க அதற்குப் பகைவர்களான அரக்கர் என்னும் களைகளை வேரோடு அழித்துக் களையும் துணிவினர் என்றாள் சூர்ப்பணகை என்பது. இங்கே 'தாபதர் அறம் நிறுத்தும் நினைப்பினர்; உன் வலி நோக்கலர்; இச் செய்தி முன் கூறப்பட்டுள்ளது என்று வேண்டாத செய்திகளை முற்கூறியது கரனின் வெறுப்பையும் கோபத்தையும் தூண்டுதற்காகஎனலாம். 5 2880. | 'மண்ணில், நோக்க அரு வானினில், மற்றினில், எண்ணி நோக்குறின், யாவரும் நேர்கிலாப் பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை, என் கண்ணின் நோக்கி உரைப்ப அருங் காட்சியாள்; |
|