பக்கம் எண் :

256ஆரணிய காண்டம்

இந்த அரிய பழி; அழிந்ததோ - தீர்ந்ததாக ஆகுமோ (ஆகாது); என்னும்-
என்று சொன்னான்.

     தான் இப்பொழுது இராமலக்குவர்களை எதிர்த்து அழிப்பது
உறுதியென்பதும், அப்படி அவர்களை அழித்தாலும் அரக்கர் சமூகத்திற்கு
அந்த மானிடரால் உண்டான பழி அழியாது என்பது கரன் கொண்ட
கருத்தாகும்.

     உலகேழ் - மேலேழும் கீழேழுமாகிய பதினான்கு உலகங்கள். எழுந்து
நின்று பொங்குவான் என இயையும். ஆல் ஈற்றசை.                9

கரனை விலக்கி பதினான்கு வீரர்கள் போரிடச் செல்லுதல்

2884.'வருக, தேர்!' எனும்
     மாத்திரை, மாடுளோர்,
இரு கை மால் வரை
     ஏழினொடு ஏழ் அனார்,
ஒரு கையால் உலகு
     ஏந்தும் உரத்தினார்,
'தருக இப் பணி எம்வயின்
     தான்' என்றார்.

    (இவ்வாறு கூறிய கரன்) தேர் வருக எனும் மாத்திரை - எனது தேர்
வரட்டும் என்று சொல்லிய அளவில்; மாடு உளோர் - அவன் பக்கத்தில்
இருப்பவர்களும்; இரு கை மால்வரை ஏழினோடு ஏழ் அனார் - இரண்டு
கைகளையுடைய பெரிய பதினான்கு மலைகளை ஒத்தவர்களும்; ஒரு
கையால் -
ஒவ்வொருவரும் தத்தம் ஒரு கையினாலே; உலகு ஏந்தும்
உரத்தினார் -
உலகம் முழுவதையும் தாங்கி ஏந்தும்
வலிமையுள்ளவர்களுமான அவனுடைய படைத் தலைவர்கள் பதினால்வர்;
இப்பணி - (கரனை நோக்கி) இப் பணியாகிய போர்த் தொழிலை; எம்
வயின் தான் தருக -
எங்களிடமே தந்தருளுக; என்றார் - என்று
வேண்டினர்.

     இரண்டு கைகளையுடைய பெருவலி படைத்த பதினால்வரான
இவர்களின் வடிவம் உருவத்தாலும், வலிமையாலும் பெரிய மலை போல
இருத்தலால் உவமானமாகிய மலைக்கு 'இருகை' என்ற அடைமொழி தந்தார்
என்பது; இல்பொருளுவமை.

     மாடு: பக்கம்; மாத்திரை: கண்ணிமைக்கும் அல்லது கை நொடிக்கும்
கால அளவு.

     கரனின் படைத் தலைவர் பதினான்கு பேர் என்பதை உணரலாம்.
தான் : பிரிநிலை.                                              10

2885. சூலம், வாள், மழு,
     தோமரம், சக்கரம்,