பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 257

கால பாசம், கதை,
     பொரும் கையினார்;
வேலை ஞாலம் வெரு வுறும்
     ஆர்ப் பினார்;
ஆல காலம் திரண்டன்ன
     ஆக்கை யார்.

    (அந்த அரக்கர்கள்) சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் கால
பாசம் கதை பொரும் கையினார் -
சூலம் முதல் கதை வரையுள்ள
போர்ப் படைகளால் போர் செய்யும் கைகளையுடையவர்கள்; வேலை
ஞாலம் -
கடல் சூழ்ந்த இவ்வுலகத்து உயிர்கள் யாவும்; வெருவுறும்
ஆர்ப்பினார் -
அஞ்சத்தக்க ஆரவாரம் உடையவர்கள்; ஆலகாலம்
திரண்டன்ன -
ஆலகாலம் என்ற நஞ்சு உருவெடுத்து வந்தாற்போன்ற;
ஆக்கையார் - உடலையுடையவர்கள்.

     கையினார், ஆர்ப்பினார், ஆக்கையார் 'ஏழினோடு ஏழனார்' என்ற
அடைமொழியோடு (2884) கூட்டுக. சூலம் - முத்தலைவேல்; மழு - கோடரி;
தோமரம் - இரும்புலக்கை; காலபாசம் - கயிற்றாலான ஒரு போர்க்கருவி;
கதை - தண்டாயுதம் ஆலகாலம் - கரிய நிறத்திற்கும் கொடுஞ்செயலுக்கு
உவமை. ஞாலம் - ஆகுபெயர்.                                 11

2886.வெம்பு கோபக்
     கனலர் விலக்கினார்,
'நம்பி! எம் அடிமைத்
     தொழில் நன்று' எனா,
'உம்பர்மேல் இன்று
     உருத்தனை போதியோ?
இம்பர்மேல் இனி யாம்
     உளெமோ?' என்றார்,

    வெம்பு கோபக் கனலர் - கொதிக்கின்ற கோபத் தீயையுடைய அந்த
அரக்கர்கள்; (கரனை நோக்கி) நம்பி - சிறந்த தலைவனே!; எம்
அடிமைத் தொழில் நன்று -
எங்களது அடிமைத் தொழில் நன்றாக
இருந்தது; எனா - என்று தம்மை இகழ்ந்தவர்களாய்; இன்று உம் பர்மேல்
-
இப்பொழுது தேவர்கள் மேல்; உருத்தனை போதியோ - கோபித்துப்
போர் செய்யப் போகிறாயோ (அப்படி இல்லையே இவ்வாறு நீ மனிதரோடு
போருக்குச் சென்றால்); இனி இம்பர்மேல் - இனி இந்தவுலகத்தில்; யாம்
உளெமோ -
நாங்கள் உயிரோடு வாழ்பவர்களாவேமோ?; - என்றார்
விலக்கினார் -
என்று சொல்லி (க்கரனைப் போருக்குச் செல்லாதபடி)
தடுத்தார்கள்.

     'எம் அடிமைத் தொழில் நன்று' - நாங்கள் உனக்கு அடியவர்களாய்
நீ இட்ட கட்டளையை ஏற்றுச் செய்வதற்குப் பணியாளராகக் காத்திருக்க, நீ