பக்கம் எண் :

260ஆரணிய காண்டம்

நோக்கினால், இராமன் வழிபட்டது அரங்கநாதப் பெருமானையே என்பது
தெளிவாகும்.

     அமலப் பெயர் : தன்னை உச்சரித்தவரின் கருமங்களையொழிக்கும் திருநாமம். துமிலம் : பேராரவாரம், போர்க்குழப்பம்.

     இப்பாடல் இராமனின் தவநிலையையும் அரக்கரின் அவநிலையையும்
ஒரு மிக்கக் கூறியவாறு காணலாம்.                              15

2890.'எற்றுவாம் பிடித்து;
     ஏந்துதும்' என்குநர்,
'பற்றுவாம் நெடும்
     பாசத்தின்' என்குநர்,
'முற்றுவாம் இறை சொல்
     முறையால்' எனா,
சுற்றினார் - வரை
     சூழ்ந்தன்ன தோற்றத்தார்.

    பிடித்து எற்றுவாம் - (இந்த மனிதர்களைப்) பிடித்து மோதுவோம்;
(பிடித்து) ஏந்துதும் - (அவர்களைக்) கையிலே பிடித்து ஏந்திக்
கொள்வோம்; என்குநர் - என்று சொல்பவர்களும்; நெடும் பாசத்தின் -
நீண்ட காலபாசம் என்னும் கயிற்றுச் சுருக்கால்; பற்று வாம் என்குநர் -
பிடித்துக் கட்டுவோம் என்று சொல்பவர்களும்; இறை சொல் முறையால் -
நம் தலைவனான கரன் சொன்னவாறு; முற்றுவாம் எனா - அந்தச்
செயலைச் செய்து முடிப்போம் என்றும் சொல்லி; வரை சூழ்ந்தன்ன
தோற்றத்தார் -
மலைகள் பல சூழ்ந்து நின்றாற் போன்ற தோற்றம்
உடையவர்களாய்; சுற்றினார் - (இராமன் இருந்த இடத்தைச்) சூழ்ந்து
கொண்டார்கள்.

     எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்றது - பந்துகளைக் கொண்டு
விளையாடுவது
போல இராமலக்குவர்களை எற்றிப் பிடித்து ஏந்திப் போர்
செய்வோம் என எளிதாகக் கருதிக் கூறியது.

     பிடித்து : மத்திம தீபம் (நடுவில் இருந்து இரு பக்கமும் விளக்குகின்ற
இடைநிலை விளக்கு).                                           16

இராமன் போருக்கு எழுதல்

2891. ஏத்து வாய்மை
     இராமன், இளவலை,
'காத்தி தையலை' என்று,
     தன் கற்பகம்