பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 261

பூத்தது அன்ன பொரு
     இல் தடக் கையால்,
ஆத்த நாணின் அரு
     வரை வாங்கினான்.

    ஏத்து வாய்மை இராமன் - யாவரும் புகழ்ந்து கொண்டாடும்
சத்தியத்தையுடைய இராமன்; இளவலை - தம்பியான இலக்குவனை
(நோக்கி); தையலை(க்) காத்தி என்று - தேவியாகிய சீதையை நீ
பாதுகாத்துக் கொண்டிரு என்று கூறி; பூத்தது கற்பகம் அன்ன - பொலிவு
பெற்ற கற்பக மரம் போன்ற; பொருவு இல் - வேறு ஒப்பில்லாத; தன்
தடக் கையால் -
தன்னுடைய பெரிய கையினால்; ஆத்த நாணின் -
கட்டப்பட்ட நாண்கயிற்றையுடைய; அருவரை வாங்கினான் -
அழித்தற்கரிய மலை போன்ற வில்லை எடுத்துக் கொண்டான்.

     ஏத்து வாய்மை இராமன் - தண்டகாரணியத்தில் வசிக்கும் முனிவர்கள்
அரக்கர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தன்னைச் சரணடைந்த
பொழுது அவர்களுக்கு இராமன் அந்த அரக்கர்களையெல்லாம்
வேரறுப்பதாக வாக்குறுதி தந்திருந்ததைப் பழுதுபடாதவாறு நிறைவேற்றத்
தொடங்கினான் என்பது.

     ஆத்த - யாத்த: மரூஉ; வரை - உவமையாகுபெயர்.           17

2892.வாங்கி, வாளொடு வாளி
     பெய் புட்டிலும்
தாங்கி, தாமரைக்
     கண்ணன், அச் சாலையை
நீங்கி, 'இவ்வழி
     நேர்மின், அடா!' எனா,
வீங்கு தோளன்
     மலைதலை மேயினான்.

    தாமரைக் கண்ணன் - செந்தாமரை மலர் போன்ற அழகிய
கண்களையுடைய இராமன்; வாங்கி - வில்லை எடுத்துக் கொண்டு;
வாளொடு - வாளுடனே; வாளி பெய் புட்டிலும் - அம்புகளை
வைத்துள்ள அம்பறாத் தூணியையும்; தாங்கி - தரித்துக் கொண்டு; அச்
சாலையை நீங்கி -
அந்தப் பர்ணசாலையை விட்டு நீங்கி; இவ்வழி
நேர்மின் அடா எனா -
இந்த இடம் (போருக்கு) வாருங்களடா என்று
(அரக்கரை நோக்கிக்) கூறி; வீங்கு தோளன் - (போர் கருதியதால்) பூரித்த
தோள்களையுடையவனாய்; மலைதலை மேயினான் - போர் செய்யத்
தொடங்கினான்.

     இராமன் வாளை இடையிலும், அம்புப் புட்டிலைத் தோள்புறத்திலும்
தாங்கினான் என்பது. உள்ளத்தைக் கவரும் அழகும் குளுமையும் நிறமும்
உருவும் ஒத்தமையால் தாமரைமலர் இராமனின் கண்களுக்கு
உவமையாயிற்று.                                             18