பக்கம் எண் :

264ஆரணிய காண்டம்

பொங்கு அரத்தம் விழிவழிப்
     போந்து உக,
வெங் கரப் பெயரோன்,
     வெகுண்டான், விடைச்
சங்கரற்கும் தடுப்பு
     அருந் தன்மையான்.

    விடைச் சங்கரற்கும் - காளை வாகனத்தையுடைய (அழித்தற்
கடவுளான) சிவபிரானுக்கும்; தடுப்பு அரும் தன்மையான் - தடுக்க
முடியாத வீரத்தன்மையுடையவனான; வெங் கரப் பெயரோன் - கொடிய
கரனென்னும் பெயரையுடைய அந்த அரக்கன்; அங்கு அரக்கர் அவிந்து
அழிந்தார் என -
தான் அனுப்பிய படைத் தலைவர்கள் இறந்தொழிந்தனர்
என்று (சூர்ப்பணகை) சொல்ல (க் கேட்டு); பொங்கு அரத்தம் -
உள்ளிருந்து பொங்குகின்ற இரத்தம்; விழிவழிப் போந்து உக - தன்
கண்களின் வழியாக வெளியே சிந்த; வெகுண்டான் - கோபங்
கொண்டான்.

     சங்கரனுக்கும் - உம்மை உயர்வு சிறப்பினது. ரத்தம் என்பதனோடு
அகர உயிர் முதலில் வந்து அரத்தம் என்றாயிற்று.                  22

2897.'அழை, என் தேர்; எனக்கு
     ஆக்கு, வெம் போர்ப் படை;
உழையர் ஓடி, ஒரு
     நொடி ஓங்கல்மேல்,
மழையின், மா முரசு
     எற்றுதிர், வல்' என்றான்-
முழையின், வாள் அரி
     அஞ்ச முழங்குவான்.

    முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் - குகைக்குள்
பதுங்கியிருக்கும் கொடிய சிங்கங்கள் அஞ்சும்படி முழக்கம் இடுபவனான
கரன்; என் தேர் அழை - என் தேரை இங்கே அழையுங்கள்; வெம்
போர்ப் படை எனக்கு ஆக்கு -
எனக்கு வலிய போர் செய்வதற்குரிய
படைக் கலங்களை ஆக்கு; வல் உழையர் ஓடி - விரைவில் ஏவலாட்கள்
ஓடிச் சென்று; ஒரு நொடி ஓங்கல்மேல் - ஒரு நொடிக்குள்ளாக
யானையின்மேல்; மழையின் - மேகம் அதிர்வது போல; மா முரசு
எற்றுதிர் -
பெரிய போர் முரசங்களை முழக்குங்கள்; என்றான் - என்று
கட்டளையிட்டான்.

     உழையர் - குற்றவேல் பணி செய்வோர். வெகுண்ட கரன்
படைக்கலங்களையும் தேரையும் கொண்டு வருக, முரசை முழக்குக என்று
கட்டளையிட, பக்கத்தில் இருந்தவர் ஓடிச் சென்று யானை மேல்
முரசேற்றிப்