| பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக, வெங் கரப் பெயரோன், வெகுண்டான், விடைச் சங்கரற்கும் தடுப்பு அருந் தன்மையான். |
விடைச் சங்கரற்கும் - காளை வாகனத்தையுடைய (அழித்தற் கடவுளான) சிவபிரானுக்கும்; தடுப்பு அரும் தன்மையான் - தடுக்க முடியாத வீரத்தன்மையுடையவனான; வெங் கரப் பெயரோன் - கொடிய கரனென்னும் பெயரையுடைய அந்த அரக்கன்; அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என - தான் அனுப்பிய படைத் தலைவர்கள் இறந்தொழிந்தனர் என்று (சூர்ப்பணகை) சொல்ல (க் கேட்டு); பொங்கு அரத்தம் - உள்ளிருந்து பொங்குகின்ற இரத்தம்; விழிவழிப் போந்து உக - தன் கண்களின் வழியாக வெளியே சிந்த; வெகுண்டான் - கோபங் கொண்டான். சங்கரனுக்கும் - உம்மை உயர்வு சிறப்பினது. ரத்தம் என்பதனோடு அகர உயிர் முதலில் வந்து அரத்தம் என்றாயிற்று. 22 2897. | 'அழை, என் தேர்; எனக்கு ஆக்கு, வெம் போர்ப் படை; உழையர் ஓடி, ஒரு நொடி ஓங்கல்மேல், மழையின், மா முரசு எற்றுதிர், வல்' என்றான்- முழையின், வாள் அரி அஞ்ச முழங்குவான். |
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் - குகைக்குள் பதுங்கியிருக்கும் கொடிய சிங்கங்கள் அஞ்சும்படி முழக்கம் இடுபவனான கரன்; என் தேர் அழை - என் தேரை இங்கே அழையுங்கள்; வெம் போர்ப் படை எனக்கு ஆக்கு - எனக்கு வலிய போர் செய்வதற்குரிய படைக் கலங்களை ஆக்கு; வல் உழையர் ஓடி - விரைவில் ஏவலாட்கள் ஓடிச் சென்று; ஒரு நொடி ஓங்கல்மேல் - ஒரு நொடிக்குள்ளாக யானையின்மேல்; மழையின் - மேகம் அதிர்வது போல; மா முரசு எற்றுதிர் - பெரிய போர் முரசங்களை முழக்குங்கள்; என்றான் - என்று கட்டளையிட்டான். உழையர் - குற்றவேல் பணி செய்வோர். வெகுண்ட கரன் படைக்கலங்களையும் தேரையும் கொண்டு வருக, முரசை முழக்குக என்று கட்டளையிட, பக்கத்தில் இருந்தவர் ஓடிச் சென்று யானை மேல் முரசேற்றிப் |