| 2559. | புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும், விண்ணிடைப் படர்தல் விட்டு, எழு விகற்பம் நினையா, எண்ணுடைக் குரிசில் எண்ணி, ‘இளையோய்! இவனை, இம் மண்ணிடைக் கடிது பொத்துதல் வழக்கு’ எனலுமே |
புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும் - உடலிற் பட்ட புண்களிலிருந்து பெருகிய இரத்த வெள்ளம் விளங்கி ஓடவும்; விண்ணிடைப்படர்தல் விட்டு - வானில் செல்வதைத் தவிர்த்து; எழு விகற்பம் நினையா - அவன்எழுந்து செல்லும் மாறுபாட்டை நினைத்து; எண்ணுடைக் குரிசில் எண்ணி - எண்ணத்தில்சிறந்த இராமன் உணர்ந்து; இளையோய்! - தம்பி!; இவனை இம் மண்ணிடைக் கடிதுபொத்துதல் வழக்கு - இவ்வரக்கனை இந்த நிலத்தில் விரைவாக மூடுதல் வழக்கு; எனலுமே -என்ற அளவில்; ஏ - ஈற்றசை. உயிர்ப்புனல் உயிர் இருப்பதற்காக உடலில் ஓடும் இரத்தம். விராதன் படைகளால்இறவாததால் மண்ணில் புதைத்தலை இராமன் கூறினான். குரிசில் - பெருமையிற் சிறந்தவன்,ஆண்பால் சிறப்புப் பெயர். 43 | 2560. | மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் நதம் உலாவு நளி நீர்வயின் அழுந்த, நவை தீர் அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று உதவு சேவடியினால், அமலன் உந்துதலுமே |
நவை தீர் அதவம் ஆய் நறுநெய் உண்டு - குற்றமற்ற அத்திக்கட்டையால் செய்த அகப்பை கொண்டு பெய்த நறு மண நெய்யை உண்டு; உலகில்அன்பர் கருதிற்று உதவு சேவடியினால் - உலகத்தில் அடியவர் நினைத்தவற்றை அருளும் சிவந்ததன் திருப்பாதத்தால்; அமலன் - தூயவனான இராமன்; உந்துதலும் - உதைத்துத்தள்ளவும்; நல்மத யானை அனையான் - சிறந்த மதம் கொண்ட யானை போன்ற இலக்குவன்; நளிநீர் உலாவு நதம்வயின் - மிகுந்த நீர் பாயும் மேற்கு நோக்கி ஓடும் ஆற்றின்அருகில்; நிலம் வகிர்ந்த குழிவாய் - மண்ணில் தோண்டிய குழியில்; அழுந்த - பதிய; ஏ - ஈற்றசை. |