பக்கம் எண் :

276ஆரணிய காண்டம்

     அரக்கரின் கருமை நிறத்தை விளக்க 'ஆலமும் வெளிதென்னும்
நிறத்தர்' என்றார். காலம் - திரள்.                               42

2917. கழலினர்; தாரினர்;
     கவச மார்பினர்;
நிழலுறு பூணினர்;
     நெறித்த நெற்றியர்;
அழலுரு குஞ்சியர்; அமரை
     வேட்டு, உவந்து,
எழலுறு மனத்தினர்;
     ஒருமை எய்தினார்.

    கழலினர் - (காலில்) வீரக் கழல் பூண்டவர்கள்; தாரினர் -
மாலையை யணிந்தவர்கள்; கவச மார்பினர் - கவசம் தரித்த
மார்பையுடையவர்கள்; நிழல் உறு பூணினர் - ஒளி மிகுந்த
ஆபரணங்களையுடையவர்கள்; நெறித்த நெற்றியர் - கோபத்தால் மேலே
நெறித்த நெற்றியையுடையவர்கள்; அழல் உறு குஞ்சியர் - நெருப்புப்
போன்று சிவந்து அடர்ந்த தலைமயிரை யுடையவர்கள்; அமரை வேட்டு -
போரினை விரும்பி; உவந்து எழல் உறு மனத்தினர் - உற்சாகங் கொண்டு
எழுகின்ற மனத்தையுடையவர்கள்; ஒருமை எய்தினார் - (தமக்குள்)
ஒற்றுமை பூண்டவர்கள்;

     அழல் உறு - உறு; உவமவுருபு ஒருமை எய்தினார் - ஒன்று கூடினர்
என்றும் போரில் ஒரே கருத்தைக் கொண்டனர் என்றும் கொள்ளலாம்.
நிழல் : ஒளி.

     'போர் எனில் புகலும் புனைகழல் மறவர்' எனப் போர் என்றாலே
விரும்புவோரும் வீரக்கழல் புனைந்தவரும் ஆகிய வீரரைப் புறநானூறு (31)
குறிப்பதை இப் பாடல் நினைவுறுத்துகிறது.                        43

2918.மருப்பு இறா மத களிற்று
     அமரர் மன்னனும்,
விருப்புறா, முகத்து எதிர்
     விழிக்கின், வெந்நிடும்;
உருப் பொறாது உலைவுறும்
     உலகம் மூன்றினும்
செருப் பெறாத் தினவுறு
     சிகரத் தோளினார்.

    இறா மருப்பு - (எளிதில்) ஒடியாத வலிய தந்தங்களையும்; மத
களிற்று -
மதத்தையுமுடைய ஐராவதமென்னும் யானையையுடைய; அமரர்
மன்னனும் -
தேவர்களுக்கு அரசனான இந்திரனும்; விருப் புறா முகத்து
எதிர் விழிக்கின் -
விருப்பமில்லாமல் தங்களுடைய முகத்துக்கு எதிரே
விழிக்க