பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 31

    பொது முகத்தின் அருள்நோக்கம் இறங்காத தாமரைக்கண்
எம்பெருமாஅன் -
நடுநிலையில் நின்று அருட்பார்வை நீங்காத செந்தாமரை
போன்ற கண்ணுடைய எங்கள் பெருமானே!; புறம் காண அகம் காண -
ஒவ்வொரு பொருளின் உள்ளும் புறமும் கண்டு (வியாபித்து); அறம்
காத்தற்கு -
தருமத்தைப் பாதுகாத்தற்கு; உனக்கு ஒருவர் ஆரும்
ஒருதுணை இன்றி -
உனக்கு வேறு ஒருவர் எவரும் ஒரு சிறு துணையும்
செய்யாமல், கறங்கு ஆகும் எனத் திரிய - காற்றாடி போலச் சுற்றித்
திரிவதற்கு; நீயேயோ கடவாய்தான் - நீ தானோகடமைப்பட்டாய்,
இயம்புதி - எனக்குக் கூறுவாய். ஆல் - அசை.

     பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் பரவிநின்று அறங்காத்து
அருள்புரிவதை இப்பாடல்விளக்கும். இறங்காத - முன் பின் தாழாத.
அறங்காக்கக் காற்றாடி போல் திரிந்த நிலையை முன்யானை காத்த
நிகழ்ச்சியில் காணலாம். துணையின்றி அறங்காப்பதால் ‘தருமத்தின் தனி
மூர்த்தி’ ஆவான் (2568). புறமாகிய ஊனக் கண்ணாலும் அகமாகிய ஞானக்
கண்ணாலும் காண - எனவும்உரைப்பர். எம்பெருமாஅன் - அண்மைவிளி
அளபெடுத்துவந்தது.                                          49

2566.துறப்பதே தொழிலாகத் தோன்றினோர்
     தோன்றியக்கால்
மறப்பரோ தம்மை அது அன்றாகில்,
     மற்று அவர் போல்
பிறப்பரோ? எவர்க்கும் தாம் பெற்ற பதம்
     பெறல் அரிதோ!
இறப்பதே, பிறப்பதே எனும் விளையாட்டு
     இனிது உகந்தோய்!

    இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் -
இறத்தல் பிறத்தல் என்று கூறும் திருவிளையாட்டில் நன்கு மகிழ்ந்து
ஈடுபட்டவனே!; துறப்பதேதொழிலாகத் தோன்றினோர் தோன்றியக்கால்-
உலகப்பற்றை நீக்குதலையே தம் செயலாகக்கொண்ட ஞானியர் ஒரு கால்
பிறந்தால்; தம்மை மறப்பரோ - தம் இயல்பைமறப்பார்களோ
(மாட்டார்கள்); அது அன்றாகில் - அது அவ்வாறு அல்லாவிடில்; மற்று
அவர் போல் பிறப்பரோ -
அவர் பிறர் போல் பிறப்பு எடுப்பாரோ
(மாட்டார்); எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ - அவ்வாறு
துறந்தவர்க்கும் அவர்கள் அடைந்தநற்பேறு பெறுதல் அரிதே ஆகும்.

     விளையாட்டு, மிகுந்த முயற்சி இல்லாமல் எளிதில் செய்வது - மாய
விளையாட்டு என்பார்பின்னரும் (2569). இறப்பதும் பிறப்பதும் செய்யும்
‘மானிட வடிவில் வந்து அவதாரம் செய்தனன்’என்பர் சிலர். பரமபதத்தை
அடைதல் துறவியர்க்கு மட்டுமின்றி இறைவன் பதம் அடைந்தவர்க்கும்எளிது
என்பதாம். இறப்பதே, பிறப்பதே-எண்ணுப் பொருளில் வந்தஏகாரங்கள்.  50