பக்கம் எண் :

34ஆரணிய காண்டம்

 நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை
     நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-
     வாராதே வரவல்லாய்!

    வாராதே வரவல்லாய் - (அடியார்க்கு) வருதற்கு 'அரியார் போலிருந்து
மிக எளியார்போல் வரும் வல்லமை உடையானே!; தாய் தன்னை அறியாத
கன்று இல்லை -
தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை; தன்
கன்றை ஆயும் அறியும் -
(அதுபோல்) தாயும் தன் கன்றை அறிந்து
கொள்ளும்; ஐய! -தலைவனே!; உலகின் தாய் ஆகின் எப்பொருளும் நீ
அறிதி -
எல்லா உலகங்களுக்கும்அன்னை ஆனதால் எல்லாப்
பொருள்களையும் நீ அறிகிறாய்; அவை உன்னை நிலை அறியா -
அப்பொருள்கள் உன் தன்மையை அறியாதுள்ளன; மாயை இது என்
கொலோ? -
இம்மாயச் சுழல்எதுவோ? (என்னால் அறிய முடியவில்லை).

     வாராதே வரவல்லாய் என்பதை வந்தாய் போல வாராதாய் வாராதாய்
போல் வருவானே' என்றபெரியார் திருவாய்மொழிப் பாசுரத்துடன் (60 : 9)
ஒப்பிடின் மேலும் தெளிவுகிட்டும். தாய்தன்னைக் கன்றறிவதை நாலடியாரும்
கூறும் (101). ஆயின் உயிர்களை நீ படைத்தாலும் அவை உன்னை
அறியவில்லை. நீயோ எல்லாம் அறிந்தவன்.                        54

2571."பன்னல் ஆம்" என்று உலகம்
     பலபலவும் நினையுமால்;
உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர்
     ஒழுக்கு அன்றே;
அன்ன ஊர்தியை முதல் ஆம்
     அந்தணர்மாட்டு அருந் தெய்வம்
நின் அலால் இல்லாமை
     நெறிநின்றார் நினையாரோ?

    உலகம் - உலகமக்கள்; "பன்னல் ஆம்" என்று - துதிக்கலாம் என்று;
பலபலவும் நினையும் - பல்வேறு தெய்வங்களை நினைப்பர்; (ஆனால்);
உன் அலால் பெருந்தெய்வம் உயர்ந்துளோர்ஒழுக்கு அன்றே -
உன்னைத் தவிர வேறு பெரிய கடவுள் உண்டெனக் கருதல் உயர்ந்த
ஞானியரின்செயல் அன்று; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்
மாட்டு -
அன்ன வாகனமுடைய பிரமனைமுதலாகக் கொண்ட
அந்தணர்களால்; அருந்தெய்வம் நின் அலால் இல்லாமை - வழிபடும்
அரிய கடவுள் உன்னை அல்லாமல் வேறு இல்லா உண்மையை;
நெறிநின்றார் நினையாரோ? - பலசமய நெறி