பக்கம் எண் :

36ஆரணிய காண்டம்

 மரு ஆரும் துழாய் அலங்கல் மணி
     மார்பில் வைகுவாள்?

    திரு ஆன நிலமகளை - அழகிய பூ தேவியை; அரவு ஆகிச்
சுமத்தியால் -
ஆதிசேடன் எனும் பாம்பாகித் தாங்கிநிற்கிறாய்; அயில்
எயிற்றின் ஏந்துதியால் -
(வராக அவதாரத்தில்) கூரிய உன்பல்லில்
தாங்கியுள்ளாய்; ஒரு வாயில் விழுங்குதியால் - (ஊழிக்காலத்தில்
அப்பூமியை)ஒரே வாயில் முழுதும் விழுங்குகின்றாய்; ஓர் அடியால்
ஒளித்தியால் -
திரிவிக்கிரமனாகி ஒரு திருவடிக்குள் மறைத்துள்ளாய்; மரு
ஆரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள் -
மணம் நிறைந்த
திருத்துழாய் மாலை உடைய நின் அழகிய மார்பில்தங்கியுள்ள திருமகள்;
இஃது அறிந்தால் சீறாளோ? -  இச் செய்திகளை அறிந்தால்உன்மேல்
ஊடல் (பெருங் கோபம்) கொள்ளமாட்டாளா? (கொள்வள்)

     திருமால் அரவானது புராணமரபு. 'நாகர்களிடை நான் அனந்தன்'
என்பது பகவத் கீதை (10 .29). மணிமார்பு - நீலமணி போல் ஒளிவீசும்
மார்பு எனலுமாம். தலைவன் பிற பெண்பால் சேரின்தலைவி சீறுவது
அகப்பொருளில் விரித்துரைக்கப் பெறும். சுமத்தியால், ஏந்துதியால்,
விழுங்குதியால், ஒளித்தியால் என நான்கு 'ஆல்'களும் அசைகள்.        57

2574.'மெய்யைத் தான் சிறிது உணர்ந்து, நீ
     விதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கு என்ன
     குறை உண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு
     அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும்
     உளர்; ஐயா!

    ஐயா! - தலைவனே!; நீ விதித்த மன்னுயிர்கள் - நீ படைத்த நிலை
பெற்ற உயிர்கள்; மெய்யைத்தான்சிறிது உணர்ந்து - நீயே பரம்பொருள்
என்ற உண்மையை ஒரளவு தெரிந்து; உய்யத் தான்ஆகாதோ - நற்கதி
அடைவது என்பது தான் முடியாதோ?; உனக்கு என்ன குறை உண்டோ -
(அவ்வாறு அவை உய்தி பெற்றால்) அதனால் உனக்கு எக்குறை ஏற்படும்?;
மழுவாளிக்கு அன்றளித்தஐயத்தால் - கோடரிப் படையைக் கொண்ட
சிவனுக்கு முன்னர் இட்ட பிச்சையால்; வையத்தார் வானத்தார் சிறிது
ஐயம் தவிர்ந்தாரும் உளர் -
மானிடரும் தேவரும்பரம்பொருள் யார்
என்று எண்ணிய சிறிது சந்தேகத்தையும் நீக்கினவர்களும் உண்டு.