(வில்லின் நாணியை) வலிய இழுத்தான்; (அப்போது); பிடித்த திண் சிலை - (இராமன்) கையில் பிடித்திருந்த வலிய வில்லானது; பேர் அகல் வான் இடை இடிப்பின் - அகன்ற பெரிய வானத்திலுண்டாகும் இடி முழக்கம் போன்ற; ஓசை பட - ஓசையுண்டாகுமாறு; கடிது இற்றது - விரைவிலே ஒடிந்தது. ஏ : ஈற்றசை. இவனையழிப்பேனென்று இராமன் கணை தொடுத்து வில்லை வளைக்கும் பொழுது இடி போலப் பேரொலியெழ அந்த வில் முறிந்தது என்பது. 175 | 3050. | வெற்றி கூறிய வானவர், வீரன் வில் இற்ற போது, துணுக்கம் உற்று ஏங்கினார்; மற்று ஓர் வெஞ் சிலை இன்மை மனக் கொளா, 'அற்றதால் எம் வலி' என, அஞ்சினார். |
வெற்றி கூறிய வானவர் - (இராமபிரானின்) வெற்றியைப் புகழ்ந்து சொல்லி்க் கொண்டிருந்த தேவர்கள்; வீரன் வில் இற்ற போது - இராமபிரானின் வில் ஒடிந்தபொழுது; துணுக்கம் உற்று ஏங்கினார் - நடுக்கமுற்று வருந்தினார்கள்; மற்று ஓர் வெம்சிலை இன்மை மனக் கொளா - (அந்த இராமனுக்கு) வேறொரு கொடிய வில் இல்லாததை மனத்திலே கொண்டு; எம் வலி அற்றது என அஞ்சினார் - எமது வலிமையொழிந்தது என்று அச்சங் கொண்டனர். ஆல் - அசை. இராமபிரானின் வில் ஒடிந்ததால் இனி அரக்கர்க்கே வெற்றியென்றும், அதனால் தமக்கு உதவி செய்வார் வேறு இல்லாமையறிந்து தம் வலிமையற்றது என்றும், இனி அரக்கரால் பெரிதும் இடருற வேண்டுமென்றும் அஞ்சினார் வானவர் என்பது. மற்றொரு வெஞ்சிலையின்மை மனக் கொளா - சேம வில்லொன்று துணையில்லாததைக் கருதி. 176 வருணன் கொடுத்த வில்லை இராமன் பெறுதல் | 3051. | என்னும் மாத்திரத்து, ஏந்திய கார்முகம் சின்னம் என்றும், தனிமையும், சிந்தியான்; மன்னர் மன்னவன் செம்மல், மரபினால், |
|