பக்கம் எண் :

362ஆரணிய காண்டம்

எடுத்து வாங்கி, வலம் கொண்டு,
     இடக் கையில்
பிடித்த போது, நெறி
     பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால், இடக்
     கண்ணொடு தோளுமே.

    கொடுத்த வில்லை - (வருணன் கொடுத்த அந்த வில்லை; அக்
கொண்டல் நிறத்தினான் -
நீர் கொண்ட மேகம் போன்ற கரிய
நிறத்தையுடைய இராமபிரான்; எடுத்து - கையில் ஏந்தி; வலம் கொண்டு
வாங்கி -
வலிமையால் வளைத்து; இடக் கையில் பிடித்த போது - இடக்
கையால் பிடித்த பொழுது; நெறி பிழைத்தோர்க்கு எலாம் - தரும
நெறியிலிருந்து தவறிய அரக்கர் எல்லோர்க்கும்; இடக் கண்ணொடு
தோளும் துடித்த -
இடக் கண்ணும் இடத்தோளும் துடித்தன;

     ஆல். ஏ : அசைகள். வாங்குதல் - வளைத்தல். ஆடவர்க்கு
இடக்கண்ணும் தோளும் துடித்தல் தீய நிமித்தம். கொண்டல் - தொழிலாகு
பெயர்.                                                    179

இராமனும் கரனும் எதிர்ரெதிர் பொருதல்

3054. ஏற்றி நாண், இமையாமுன்
     எடுத்து, அது,
கூற்றினாரும் குனிக்க,
     குனித்து, எதிர்
ஆற்றினான்அவன் ஆழிஅம்
     தேர், சரம்
நூற்றினால், நுண்
     பொடிபட, நூறினான்.

    (இவ்வாறு) இமையாமுன் - கண் இமைக்கும் நேரத்திலே; அது
எடுத்து -
அந்த வில்லையேந்தி; கூற்றினாரும் குனிக்க - யமனும் கண்டு
அஞ்சும்படி; குனித்து - வளைத்து; நாண் ஏற்றி - நாணையிழுத்துப் பூட்டி;
சரம் நூற்றினால் - நூறு அம்புகளால்; எதிர் ஆற்றினான் அவன் -
எதிரே வந்து போர் செய்தவனான அந்த அரக்கனுடைய; ஆழி அம் தேர்-
வலிய சக்கரம் பூண்ட அழகிய தேரை; நுண் பொடிபட நூறினான் -
நுண்ணிய பொடியாகுமாறு அழித்தான்.

எதிர்த்த கரனது தேரை இராமபிரான் நூறு அம்புகளால் அழித்தான்
என்பது. கூற்றினாரும் குனித்தது - அதுகாறும் இராவணனது ஆணைக்கு
அஞ்சி அரக்கரிடம் அணுகாதிருந்து, இப்பொழுது இராமனின் துணை
வலியால் இனி அவ்வரக்கர்களைப் பற்றலாம் என்றமையால்.          180