பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 365

நெருங்கி வந்தான்; இராமன் அங்கு - இராமன் அப்பொழுது; ஓர் தனி
கணை ஏவினான் -
ஒப்பற்ற ஓர் அம்பினை அவன் மேல் செலுத்தினான்.

     வலக்கையும், உலக்கையும் அறுபட்ட பின்பும் கரன் சீறி வந்த
வல்லமைக்கு விடப் பற்கள் முறிந்த பின்பு நாகப் பாம்பு சீறுதலை உவமை
கூறினார். விரா வரும் ஒரு சொல். விராவ அரு எனப் பிரித்து அருகில்
நெருங்கவொண்ணாத கடு என்றும் பொருள் கொள்ளலாம். இம் மூன்று
பாடல்களிலும் காப்பியத் தலைவனின் பெயர் தொடர்ந்து ஒவ்வொரு
விதமாக வந்துள்ளது.                                         184

3059. வரம் அரக்கன்
     படைத்தலின், மாயையின்,
உரமுடைத் தன்மையால்,
     உலகு ஏழையும்
பரம் முருக்கிய
     பாவத்தினால், வலக்
கரம் என, கரன்
     கண்டம் உற்றான்அரோ.

    வரம் படைத்தலின் - வரங்கள் பெற்றுள்ளமையாலும்; மாயையின் -
மாயைகளைக் கொண்டுள்ளமையாலும்; உரம் உடைத் தன்மையால் -
வலிமையைப் பெற்றுள்ளமையாலும்; அரக்கன் - அரக்கனான இராவணன்;
உலகு ஏழையும் - ஏழுலகத்து உயிர்களையும்; பரம் முருக்கிய -
மிகுதியாக அழித்த; பாவத்தினால் - தீவினையால்; கரன் வலக்கரம் என-
கரன் முன்பு வலக்கை துணிக்கப்பட்டது போல; கண்டம் உற்றான் -
இப்பொழுது தனது கழுத்தறுபட்டான்.

     அரோ - ஈற்றசை. மிகப் பெருஞ் சேனைக்குத் தலைவனாய் மிக்க
வலியவனாக இராவணனுக்குத் தம்பி முறையில் நின்ற கரன் அழிந்தது
இராவணனின் மிக்க வருத்தத்துக்கும் வலிமைக் குறைவிற்கும்
காரணமாதலைக் கொண்டு வர பலமும், மாயா பலமும், உடல் வலிமையும்
ஆகிய இவ் வலிமைகளால் இராவணன் எல்லாவுலகத்தையும் நலிந்த
தீவினையால் கரன் அழிந்தான் என்றார். கழுத்து அறுபட்டதற்குக்
கையறுபட்டதையுவமை கூறினார். கரன் இராவணனுக்கு வலக்கரம்
போன்றவன். என்று குறிப்பு நயம் காண்க.                        185

வானவர் மகிழ்தல்

3060. ஆர்த்து எழுந்தனர்,
     ஆடினர், பாடினர்,
தூர்த்து அமைந்தனர், வானவர்
     தூய் மலர்;
தீர்த்தனும் பொலிந்தான்,
     கதிரோன் திசை