அரோ : ஈற்றசை. தேவர்கள் துதித்ததால் எழுந்த ஒலி கடல் ஒலித்தல் போலும் என்பது. மூத்தம் : முகூர்த்தம் - இரு நாழிகைப் பொழுது என்பர். 189 சூர்ப்பணகை அழுது புலம்பி, இலங்கைக்கு ஏகுதல் 3064. | இங்கு நின்றது உரைத்தும்: இராவணன் தங்கை தன் கை, வயிறு தகர்த்தனள்; கங்குல் அன்ன கரனைத் தழீஇ, நெடும் பொங்கு வெங் குருதிப் புரண்டாள் அரோ. |
இங்கு நின்றது - இவ்விடத்தில் (சொல்லாமல்) எஞ்சி நின்ற செய்தியை; உரைத்தும் - இனிச் சொல்லுவோம்; இராவணன் தங்கை - இராவணன் தங்கையான சூர்ப்பணகை; தன் கை வயிறு தகர்த்தனள் - தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு; கங்குல் அன்ன கரனைத் தழீஇ - இருளையொத்த மேனியையுடைய கரனைத் தழுவி; நெடும் பொங்கு வெம் குருதிப் புரண்டாள் - மேலே பொங்கியெழுந்த நெடிய வெப்பமான இரத்த வெள்ளத்தில் விழுந்து புரண்டாள். அரோ : ஈற்றசை. கரன் என்றது அவனது உயிர் நீத்த உடலை. தழீஇ சொல்லிசையளபெடை. வயிறு தகர்த்தல் - சோகமுற்ற மகளிரின் இயல்பு. 190 3065. | 'ஆக்கினேன் மனத்து ஆசை; அவ் ஆசை என் மூக்கினோடு முடிய, முடிந் திலேன் வாக்கினால், உங்கள் வாழ்வையும் நாளையும் போக்கினேன்; கொடியேன்' என்று போயினாள். |
மனத்து - என் மனத்தில்; ஆசை ஆக்கினேன் - (இராமன்பால்) ஆசையை வளர்த்தேன்; அவ் ஆசை - அந்த (வேண்டாத) ஆசை; என் மூக்கினோடு முடிய - என் மூக்கு முதலியன அறுபட்டதோடு முடிந்தொழிய; முடிந்திலேன் - (அவ்வளவில்) இறந்து படாத நான்; வாக்கினால் - என் வாய்ச் சொற்களால்; உங்கள் வாழ்வையும் நாளையும் போக்கினேன் - உங்களுடைய வாழ்க்கையையும் வாழ்நாளையும் ஒழித்தேன்; கொடியேன் - |