பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 375

முதலானவர்களுடைய; நாயகர் நளிர்மணி மகுடம் - தலைவர்களின்
பெருமைக்குரிய மணிகள் பதித்த கிரீடங்கள்; நண்ணலால் - (அவர்கள்
வணங்கும் போதெல்லாம்) வந்து தன் மேற்படுதலால்; தேய்வு உறத்
தேய்வுற -
தேய்வினை அடையுந்தோறும், பெயர்ந்து - புதிய ஒளியை
மீண்டும் பெற்று; அடிநின்று ஆர்ப்ப - (தன்) பாதங்களில் பொருந்தி
ஒலிக்கவும்.... (ஏ - அசை)

     இது முதல் ஆறு கவிகள் பல்வகைத் தேவரும் இராவணன்
அவையில் பணிந்து நிற்றலைக் கூறுகின்றன.                        6

3073. மூவகை உலகினும்
     முதல்வர் முந்தையோர்,
ஓவலர் உதவிய
     பரிசின் ஓங்கல்போல்,
தேவரும் அவுணரும்
     முதலினோர், திசை
தூவிய நறு மலர்க்
     குப்பை துன்னவே.

    மூவகை உலகினும் - மூன்று உலகங்களிலும்; முதல்வர் -
தலைவர்களாக உள்ளவர்கள்; முந்தையோர் - முற்பட்டு வந்தவர்களாய்;
ஓவலர் உதவிய - ஓய்வின்றிக் கொண்டு வந்து தந்த; பரிசின் ஓங்கல்
போல் -
காணிக்கைகளின் குவியல் போல; தேவரும் அவுணரும்
முதலினோர் -
தேவர், அசுரர் முதலியவர்கள்; திசை தூவிய -
அனைத்துத் திசைகளிலிருந்தும் சொரிந்த; நறுமலர்க் குப்பை - மணமலர்க்
குவியல்கள்; துன்ன - நிறைந்திருக்கவும்...(ஏ - அசை).

     இராவணன் மேற் சொரிந்த மலர் மழைக்கு அவன் முன் வைத்த
பொன் மலர்க் குவியலை உவமை கூறினார்.                         7

3074. இன்னபோது இவ் வழி
     நோக்கும் என்பதை
உன்னலர், கரதலம்
     சுமந்த உச்சியர்,
மின் அவிர் மணி முடி
     விஞ்சை வேந்தர்கள்
துன்னினர், முறை முறை
     துறையில் சுற்றவே,

    மின் அவிர் மணி முடி - மின்னலென ஒளி விரிக்கும் மணிகள்
பொருந்திய மகுடம் சூடிய; விஞ்சை வேந்தர்கள் - வித்தியாதர
மன்னர்கள்; இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை - இன்ன
நேரம் இந்தப் பக்கம்