பக்கம் எண் :

376ஆரணிய காண்டம்

(இராவணன்) நோக்குவான் என்பதை; உன்னலர் - அறியாதவர்களாய்;
கரதலம் சுமந்த உச்சியர் - (எப்போதும் தங்கள்) கரங்களைத் தலைமேற்
சுமந்தவர்களாய்; துன்னினர் - நெருங்கி நின்று; முறை முறை - வரிசை
வரிசையாக; துறையில் சுற்ற - அவை மண்டபத்தே சூழ்ந்து நிற்கவும்....
(ஏ- அசை).

     இராவணன் பார்வை படப் பரிதவித்துக் காத்து நிற்கும் வித்தியாதர
வேந்தர் நிலை கூறப்பட்டது. உன்னலர், உச்சியர் - முற்றெச்சங்கள்.      8

3075. மங்கையர்திறத்து ஒரு
     மாற்றம் கூறினும்,
தங்களை ஆம் எனத்
     தாழும் சென்னியர்,
அங்கையும் உள்ளமும்
     குவிந்த ஆக்கையர்,
சிங்க ஏறு என, திறல்
     சித்தர் சேரவே.

    மங்கையர் திறத்து - (ஏவல்) மகளிரின் பால்; ஒரு மாற்றம்
கூறினும் -
ஏதேனும் கட்டளை மொழியினும்; தங்களை ஆம் என -
(இராவணன்) தங்களிடம் கூறிய தாம் என்று; தாழும் சென்னியர் -
வணங்கும் தலையினையும்; அங்கையும் உள்ளமும் - அழகிய கையும்
மனமும்; குவிந்த ஆக்கையர் - வளைந்த உடம்பினையும்
(உடையவர்களாய்); சிங்க ஏறு எனத் திறல் சித்தர் - ஆண் சிங்கம்
போன்ற சித்தர்கள்; சேர - திரண்டு நிற்கவும்..... (ஏ - அசை).

     சித்தர்கள் ஒரு தேவ சாதியார் : தவப் பேராற்றலால்
சித்தர்களானோரும் இராவணன் அவையிலே அவன் தவப் பெருக்கத்தால்
சிறியோராயினர்.                                               9

3076. அன்னவன் அமைச்சரை நோக்கி,
     ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும்
     நடுங்கும் சிந்தையர்,
'என்னைகொல் பணி?'
     என இறைஞ்சுகின்றனர்.
கின்னரர், பெரும்
    பயம் கிடந்த நெஞ்சினர்.

    அன்னவன் - இராவணன்; அமைச்சரை நோக்கி - தன்
அமைச்சர்களைப் பார்த்து; ஆண்டு - அவ்விடத்தில்; ஒரு நல்மொழி
பகரினும் -
ஒரு நல்ல சொல்லைப் பேசிடினும்; நடுங்கும் சிந்தையர் -
(தங்களைத் தண்டிக்கும்படி உரைத்ததாக எண்ணி) அஞ்சும்
மனத்தவர்களாய்;