இசையினை - புகழை; தும்புரு - தும்புருவென்னும் கந்தருவன்; இசையின் ஏத்த - (வீணை) இசையோடு புகழவும்....(ஏ - அசை). இராவணன் வெற்றித் தோள்களைத் தும்புரு என்னும் கந்தருவன் இசை பாடிப் புகழ்ந்தமை கூறினார். தும்புரு நாரதன் போலும் முனிவன். அவன் வீணை கலாவதி. 12 3079. | சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே பாணிகள் பணி செய, பழுது இல் பண் இடை வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை, வாணியின், நாரதன், செவியின் வார்க்கவே. |
சேண் உயர் - தொலைவிலுள்ள விண்ணுலகில் மேம்பட்ட; நெறி முறை - இசை விதிகளின் ஒழுங்கு; திறம்பல் இன்றி - தவறுதல் இல்லாமல்; பாணிகள் - கைகள்; பணி செய - (இசைத் தானங்களில்) உரிய தொழில் செய்ய; வீணையின் நரம்பிடை விளைத்த - வீணையின் நரம்புகளில் தடவி எழுப்பிய; பழுது இல் பண் இடை - குற்றமில்லாத இராகத்தில்; தே மறை - இனிய வேதத்தை; நாரதன் - நாரத மாமுனி; வாணியின் - கலைமகளைப் போல; செவியின் வார்க்க - காதுகளில் பொழிய....(ஏ - அசை). இராவணன் கேட்டு மகிழ வீணை தடவிச் சாம வேத கீதம் நாரதன் இசைத்தான். தே மறை என்றலால் சாம வேதமாயிற்று. நாரதன் - ஆத்ம ஞானம் அளிப்பவன்; மனிதர் ஒற்றுமை கெடுப்பவன் என்றும் பொருள் கூறுவர். அவன் வீணையின் பெயர் மகதீ. (சரசுவதி வீணை - கச்சபி). 13 3080. | மேகம் என் துருத்தி கொண்டு, விண்ணவர் தருவும் விஞ்சை நாகமும் சுரந்த தீந் தேன் புனலொடும் அளாவி, நவ்வித் தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் சீகர மகர வேலைக் காவலன், சிந்த மன்னோ, |
விண்ணவர் தருவும் - தேவர்களின் கற்பக மரங்கள் தரும் மலர்களும்; விஞ்சை நாகமும் - வித்தியாதரர்களின் சிறந்த மரங்களின் மலர்களும்; சுரந்த தீந்தேன் - சொரியும் இனிய தேனை; புனலொடும் அளாவி - நன்னீரோடு |