பக்கம் எண் :

378ஆரணிய காண்டம்

இசையினை  - புகழை; தும்புரு - தும்புருவென்னும் கந்தருவன்;
இசையின் ஏத்த - (வீணை) இசையோடு புகழவும்....(ஏ - அசை).

     இராவணன் வெற்றித் தோள்களைத் தும்புரு என்னும் கந்தருவன்
இசை பாடிப் புகழ்ந்தமை கூறினார். தும்புரு நாரதன் போலும் முனிவன்.
அவன் வீணை கலாவதி.                                       12

3079.சேண் உயர் நெறி முறை
     திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செய,
     பழுது இல் பண் இடை
வீணையின் நரம்பிடை
     விளைத்த தேமறை,
வாணியின், நாரதன்,
     செவியின் வார்க்கவே.

    சேண் உயர் - தொலைவிலுள்ள விண்ணுலகில் மேம்பட்ட; நெறி
முறை -
இசை விதிகளின் ஒழுங்கு; திறம்பல் இன்றி - தவறுதல்
இல்லாமல்; பாணிகள் - கைகள்; பணி செய - (இசைத் தானங்களில்)
உரிய தொழில் செய்ய; வீணையின் நரம்பிடை விளைத்த - வீணையின்
நரம்புகளில் தடவி எழுப்பிய; பழுது இல் பண் இடை - குற்றமில்லாத
இராகத்தில்; தே மறை - இனிய வேதத்தை; நாரதன் - நாரத மாமுனி;
வாணியின் - கலைமகளைப் போல; செவியின் வார்க்க - காதுகளில்
பொழிய....(ஏ - அசை).

     இராவணன் கேட்டு மகிழ வீணை தடவிச் சாம வேத கீதம் நாரதன்
இசைத்தான். தே மறை என்றலால் சாம வேதமாயிற்று. நாரதன் - ஆத்ம
ஞானம் அளிப்பவன்; மனிதர் ஒற்றுமை கெடுப்பவன் என்றும் பொருள்
கூறுவர். அவன் வீணையின் பெயர் மகதீ. (சரசுவதி வீணை - கச்சபி).    13

3080.மேகம் என் துருத்தி கொண்டு,
     விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீந் தேன்
     புனலொடும் அளாவி, நவ்வித்
தோகையர் துகிலில் தோயும்
     என்பது ஓர் துணுக்கத்தோடும்
சீகர மகர வேலைக்
     காவலன், சிந்த மன்னோ,

    விண்ணவர் தருவும் - தேவர்களின் கற்பக மரங்கள் தரும்
மலர்களும்; விஞ்சை நாகமும் - வித்தியாதரர்களின் சிறந்த மரங்களின்
மலர்களும்; சுரந்த தீந்தேன் - சொரியும் இனிய தேனை; புனலொடும்
அளாவி -
நன்னீரோடு