பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 379

கலந்து; மேகம் என் துருத்தி கொண்டு - முகில்களாகிற வீசு குழலில்
எடுத்துக் கொண்டு; மகர வேலைக் காவலன் - சுறா மீன்கள் நிரம்பிய
கடலுக்குத் தலைவனாகிய வருணன்; நவ்வித் தோகையர் துகிலில் தோயும்-
(இராவணன் அவையிலுள்ள) மானும் மயிலும் போன்ற மகளிரது
ஆடைகளில் படியும்; என்பது ஓர் துணுக்கத்தோடும் - என்னும் ஓர்
அச்சத்தோடு; சீகரம் சிந்த - சிறு துளிகளாகச் சிதறவும்........(மன்; -
அசைகள்).

     தரு, நாகம் என்பன மரங்கள்; இங்கு முதலாகு பெயர்களாய்
மலர்களைச் சுட்டின. அவைக்களத்திலுள்ள மகளிர் ஆடையை
நனைத்துவிடுமோ என்று அஞ்சினான். இப்பாடல் முதல் ஆறு கவிகள் நீர்க்
கடவுள் முதலியோர் நீர் தெளித்தல் முதலிய பணிவிடைகள் செய்தலைக்
கூறும்.14

3081. நறை மலர்த் தாதும் தேனும்,
     நளிர் நெடு மகுட கோடி
முறை முறை அறையச் சிந்தி
     முரிந்து உகும் மணியும் முத்தும்
தறையிடை உகாதமுன்னம் தாங்கினன்
     தழுவி வாங்கி,
துறைதொறும் தொடர்ந்து நின்று, சமீரணன்
     துடைப்ப மன்னோ,

    நறைமலர் - நறுமண மலர்களினின்றும் (சிந்துகிற); தாதும் தேனும் -
மகரந்தமும், தேனும்; நளிர் நெடு மகுட கோடி - ('அவையினைச் சார்ந்து
வந்த அரசர்களின்) பெரிய உயர்ந்த கிரீடத் தொகுதிகள்; முறை முறை
அறைய -
(நெரிசலால்) ஒன்றோடொன்று உராய்ந்து கொள்ளுதலால்;
முரிந்து சிந்தி உகும் - சேத முற்று சிந்திச் சிதறும்; மணியும் முத்தும் -
மாணிக்கங்களும் முத்துக்களும்; தறையிடை உகாத முன்னம் - தரையில்
விழும் முன்னரே; சமீரணன் - வாயுவாகிய காற்றுக் கடவுள்; தழுவித்
தாங்கினன் வாங்கி -
ஆங்காங்கு சென்று ஏந்தியெடுத்து; துறை தொறும்
தொடர்ந்து நின்று -
(மண்டபத்தின்) ஒவ்வோர் இடத்திலும் விடாது
சென்று நின்று; துடைப்ப - அவ்விடங்களை மாசுபடாமல் தூய்மை
செய்யவும்..... (மன்; ஓ - அசைகள்).

     இராவணன் அவையில் குப்பையாக விழுவன மலர் மகரந்தமும்
மணிகளுமே ஆகும் எனவும், அவையும் உடனுக்குடன் தூய்மை
செய்யப்பட்டன எனவும் கூறப்பட்டன.15

கலிவிருத்தம்

3082.மின்னுடை வேத்திரக்
     கையர், மெய் புகத்