ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! - சிறிதும் ஒப்பு வேறு பெற முடியாத பொருளே!;முன்உவந்து உறையும் - முன்னே மனம் விரும்பிப் பள்ளி கொண்ட; அப்பு உறையுள் துறந்து- திருப்பாற்கடலாம் இருப்பிடத்தை விட்டு நீங்கி; அடியேன் அருந்தவத்தால் - அடியவன் முன் செய்த அரிய தவப்பேற்றால்; அணுகுதலால் இப்பிறவிக் கடல் கடந்தேன் - நீ எனக்குக் காட்சியளிக்க வந்ததால் என் இழிபிறப்பாம் கடலை விட்டுப் பிழைத்தேன்; இனிப்; பிறவேன் - இனி மறுபடியும் பிறக்க மாட்டேன்; இருவினையும் - என் நல்வினை தீவினைகள் எல்லாம்; துப்புறழும் நீர்த்த - பவளம் போன்ற செந்நிறம் கொண்ட;சுடர்த் திருவடியால் - நெருப்பு போன்ற உன் திருவடியால்; நீ துடைத்தாய் - நீ போக்கி அருளினாய். இராமன் தன் திருவடிகளால் உதைத்துப் பள்ளத்தில் தள்ளிய பொழுது 'திருவடியால்துடைத்தாய்' எனப் போற்றுகிறான் விராதன். அப்பு - நீர், நீராலாகிய கடல், ஆகுபெயர். 60 விராதன் தன் வரலாறு கூறல். 2577. | இற்று எலாம் இயம்பினான் நிற்றலோடும், 'நீ இவ்வாறு உற்றவாறு உணர்த்து' எனா, வெற்றியான் விளம்பினான் |
இற்று எலாம் இயம்பினான் நிற்றலோடும் - இவ்விதமாய் எல்லாவற்றையும் சொன்ன விராதன் அவ்வாறு சொல்லி நின்ற அளவில்; 'நீ இவ்வாறு உற்றவாறு உணர்த்து' எனா வெற்றியான் விளம்பினான் - நீ இவ்விதம் அரக்கனாகப்பிறந்த வரலாற்றை அறிவிப்பாய்' என்று இராமன் கூறப் பிறவியை வென்றவனாம் விராதன் கூறத்தொடங்கினான். வெற்றியான் - விராதனை வென்ற இராமனும் ஆவான். இற்று எலாம்- ஒருமை, பன்மைமயக்கம். 61 2578. | கள்ள மாய வாழ்வு எலாம் விள்ள, ஞானம் வீசு தாள் வள்ளல், வாழி! கேள்! எனா, உள்ளவாறு உணர்த்தினான் |
கள்ளமாய வாழ்வு எலாம் விள்ள - திருட்டும் வஞ்சகமும் உடைய என் இப்பிறவி வாழ்க்கையை எல்லாம் விண்டு போக; ஞானம் வீசுதாள் வள்ளல் வாழி! கேள் எனா - ஞானத்தை அருளும் திருவடி உடைய வள்ளல் இராமனே!வாழ்வாயாக! நீ கேட்டருள்க என்று; உள்ளவாறு உணர்த்தினான் - தன் வரலாற்றை உள்ளபடிகூறுவானாயினான். |