| துன் நெடுங் கஞ்சுகத் துகிலர், சோர்விலர், பொன்னொடு வெள்ளியும், புரந்தரா தியர்க்கு இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே, |
மின்னுடை வேத்திரக் கையர் - மின்னல் போல் ஒளி வீசும் பொற்பிரம்பு ஏந்தியவர்களாய்; மெய் புகத்துன் - உடல் முழுதும் முடி நெருங்கிய; நெடுங் கஞ்சுகத் துகிலர் - நீண்ட சட்டையைத் தரித்தவர்களாய்; பொன்னொடு வெள்ளியும் - தேவகுரு வியாழனும், அசுர குரு வெள்ளியும்; புரந்தராதியர்க்கு - இந்திரன் முதலிய தேவர்களுக்கு; சோர்விலர் - தளர்ச்சியில்லாதவர்களாய்; முறை முறை - தக்க வரிசைப்படி; இருக்கை இன் இயல் ஈய - ஆசனங்களை இனிய தன்மையோடு காட்டி அமரச் செய்தனர்.....(ஏ - அசை). 16 3083. | சூலமே முதலிய துறந்து, சுற்றிய சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன், தோலுடை நெடும் பணை துவைக்குந்தோறு எலாம், காலன் நின்று, இசைக்கும் நாள் கடிகை கூறவே, |
சூலமே முதலிய துறந்து - (தனக்கு உரிய) சூலம் முதலிய படைக்கலங்கள் நீத்து; சுற்றிய சேலையால் செறிய வாய் புதைத்த - சுற்றிய ஆடைத் தலைப்பால் இறுக்கமாக வாயையும் மறைத்து; காலன் - காலத்தை அறியும் கடவுளாகிய எமன்; செங்கையன் - சிவந்த கரங்கள் படைத்தவனாய்; தோலுடை நெடும் பணை - தோல் போர்த்த பெரிய பேரிகைகளை; துவைக்கும் தோறு எலாம் - அடிக்கப்படும் நேரங்களில் எல்லாம்; நின்று - வந்து நின்று; இசைக்கும் நாள் கடிகை கூற - கூறத்தக்க நாளின் நாழிகைக் கணக்கை எடுத்துரைக்கவும்....(ஏ - அசை). அனைவரையும் நடுங்க வைக்கும் எமன் பட்டபாடு உரைக்கப்பட்டது. 17 3084. | நயம் கிளர் நான நெய் அளாவி, நந்தல் இல் |
|