பக்கம் எண் :

380ஆரணிய காண்டம்

 துன் நெடுங் கஞ்சுகத்
     துகிலர், சோர்விலர்,
பொன்னொடு வெள்ளியும்,
     புரந்தரா தியர்க்கு
இன் இயல் முறை
     முறை இருக்கை ஈயவே,

    மின்னுடை வேத்திரக் கையர் - மின்னல் போல் ஒளி வீசும்
பொற்பிரம்பு ஏந்தியவர்களாய்; மெய் புகத்துன் - உடல் முழுதும் முடி
நெருங்கிய; நெடுங் கஞ்சுகத் துகிலர் - நீண்ட சட்டையைத்
தரித்தவர்களாய்; பொன்னொடு வெள்ளியும் - தேவகுரு வியாழனும், அசுர
குரு வெள்ளியும்; புரந்தராதியர்க்கு - இந்திரன் முதலிய தேவர்களுக்கு;
சோர்விலர் - தளர்ச்சியில்லாதவர்களாய்; முறை முறை - தக்க
வரிசைப்படி; இருக்கை இன் இயல் ஈய - ஆசனங்களை இனிய
தன்மையோடு காட்டி அமரச் செய்தனர்.....(ஏ - அசை).               16

3083. சூலமே முதலிய
     துறந்து, சுற்றிய
சேலையால் செறிய வாய்
     புதைத்த செங்கையன்,
தோலுடை நெடும் பணை
     துவைக்குந்தோறு எலாம்,
காலன் நின்று, இசைக்கும்
     நாள் கடிகை கூறவே,

    சூலமே முதலிய துறந்து - (தனக்கு உரிய) சூலம் முதலிய
படைக்கலங்கள் நீத்து; சுற்றிய சேலையால் செறிய வாய் புதைத்த -
சுற்றிய ஆடைத் தலைப்பால் இறுக்கமாக வாயையும் மறைத்து; காலன் -
காலத்தை அறியும் கடவுளாகிய எமன்; செங்கையன் - சிவந்த கரங்கள்
படைத்தவனாய்; தோலுடை நெடும் பணை - தோல் போர்த்த பெரிய
பேரிகைகளை; துவைக்கும் தோறு எலாம் - அடிக்கப்படும் நேரங்களில்
எல்லாம்; நின்று - வந்து நின்று; இசைக்கும் நாள் கடிகை கூற -
கூறத்தக்க நாளின் நாழிகைக் கணக்கை எடுத்துரைக்கவும்....(ஏ - அசை).

     அனைவரையும் நடுங்க வைக்கும் எமன் பட்டபாடு உரைக்கப்பட்டது. 17

3084. நயம் கிளர் நான நெய்
     அளாவி, நந்தல் இல்