பக்கம் எண் :

382ஆரணிய காண்டம்

கன்றான நந்தினியும்; நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம்,
கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என ஒன்பது.                19

3086.குண்டலம் முதலிய குலம்
     கொள் பேர் அணி
மண்டிய பேர் ஒளி
     வயங்கி வீசலால்,
'உண்டுகொல் இரவு, இனி
     உலகம் ஏழினும்?
எண் திசை மருங்கினும்
     இருள் இன்று' என்னவே,

    குண்டலம் முதலிய - குண்டலம் தொடங்கி அமைந்த; குலம் கொள்
பேரணி -
பல்வேறு வகையினவாகிய சிறந்த அணிகலன்கள்; மண்டிய
பேர் ஒளி -
திரண்ட மிக்க ஒளியை; வயங்கி வீசலால் - (எங்கும்)
விளங்கும்படி வீசுவதால்; இனி உலகம் ஏழினும் - இனி மேல் ஏழு
உலகங்களிலும்; இரவு உண்டு கொல் - இருள் செறிந்த பொழுதும்
உண்டாகுமோ?; எண்திசை மருங்கினும் - எட்டுத் திக்குகளின்
பக்கங்களிலும்; இருள் இன்று என்ன - இருள் காண முடியவில்லையே
என்று கூறும் படியாகவும்.....(ஏ - அசை).

     ஏழு உலகமாவன - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்
லோகம், ஜன லோகம், தபோ லோகம், சத்ய லோகம் என மேல் ஏழும்,
அதல, விதல, கதல, தராதல ரசாதல, மகாதல, பாதலம் எனக் கீழ் ஏழுமாம்.
 20

3087. கங்கையே முதலிய
     கடவுட் கன்னியர்
கொங்கைகள் சுமந்து இடை
     கொடியின் ஒல்கிட,
செங் கையில் அரிசியும்
     மலரும் சிந்தினர்,
மங்கல முறை மொழி
     கூறி, வாழ்த்தவே,

    கங்கையே முதலிய - கங்கை தொடங்கியமைந்த; கடவுட் கன்னியர்-
(புண்ணிய தீர்த்தங்களாகிற) தெய்வப் பெண்கள்; கொங்கைகள் சுமந்து -
பருத்த தனங்கள் தாங்கிய; இடைகொடியின் ஒல்கிட - தம் இடை கொடி
போல் துவள நின்று; செங்கையில் அரிசியும் மலரும் சிந்தினர் - சிவந்த
கைகளில் ஏந்திய மங்கல அரிசியையும் மலர்களையும் (இராவணன் மேல்)
தூவினராகி; முறை - வரிசையாக; மங்கல மொழி கூறி வாழ்த்த - மங்கல
மொழிகள் கூறி வாழ்த்தவும்......(ஏ - அசை).21